மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Friday 2 December 2011

படிப்பிற்காக நடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தேன். ஷெரின்





நடிப்புக்கு முழுக்கு போடவில்லை. படிப்பதற்காக சென்றுவிட்டேன் என்றார் ஷெரீன். ‘துள்ளுவதோ இளமை’, ‘விசில்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஷெரீன். அவர் கூறியதாவது: துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானேன். சமீபகாலமாக படங்களில் நடிக்கவில்லை. நடிப்புக்கு நான் முழுக்கு போட்டுவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைத்திருக்கிறேனே தவிர, ஒரேயடியாக நிறுத்திவிடவில்லை. பெங்களூரில் பட்டப்படிப்பு முடிக்க சென்றுவிட்டேன். மேலும் நல்ல ஸ்கிரிப்ட் எதுவும் வரவில்லை.


இந்நிலையில்தான் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் ‘அபாயம்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. தெலுங்கு, தமிழ் இரு மொழியில் இப்படம் எடுக்கப்பட்டது. இளைஞர்கள் 5 பேர் இரவு பார்ட்டியில் கலந்துகொள்கின்றனர். அவர்களை போலீஸ் சுற்றி வளைக்கும்போது அருகில் உள்ள காட்டுக்குள் பதுங்குகின்றனர். அப்போது ஒரு கும்பல் குழந்தை ஒன்றை நரபலி தர முயற்சிக்கிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். இதில் நடித்தது த்ரில் அனுபவம். நரேஷ், ஸ்வாதி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஜோஷ்வா ஸ்ரீதர் இசை.

‘குழந்தை நரபலி கதையில் நடித்தது ஏன்?’ என்கிறார்கள். இப்படிப்பட்ட கதையில்தான் நடிப்பேன் என்று எந்த முடிவும் செய்யவில்லை. நல்ல வேடங்கள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். படிப்பு முடிந்ததும் சினிமாவில் முழு கவனம் செலுத்துவேன். இவ்வாறு ஷெரீன் கூறினார்.

No comments:

Post a Comment