மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday 29 November 2011

நான் ஏன் அப்படி சொன்னேன்... அஞ்சலி விஷயத்தில் ஜெய்


'அஞ்சலிக்கும் எனக்கும் காதல் இல்லை. சத்தியமாக நான் ஒரு நடிகையைAnjali - Jaiகல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்' என்று கூறியிருந்தார் ஜெய். இதில் அடங்கியிருக்கும் மெய் பொருள், மறை பொருள், உட் பொருள், உப பொருள் எல்லாவற்றையும் புரிந்து கொண்ட நடிகைகள் சிலர், உர்ர்ர்ர்ராகிவிட்டார்கள் ஜெய் மீது.
வேட்டை மன்னன் படத்தின் டிஸ்கஷனுக்காக சிம்புவோடு வெளிநாடு போய்விட்டு திரும்பிய ஜெய், இந்த உர்ர்ர் மேட்டரில் கொஞ்சம் அப்செட். (யார் யாரெல்லாம் போன் செய்து கோப முகம் காட்டினார்களோ?)
சட்டுபுட்டென்று அதற்கும் ஒரு மறுப்பு தெரிவித்திருக்கிறார் பிரதர். நான் எது சொன்னாலும் அதை தப்பா புரிஞ்சுக்கறாங்க சிலர். உண்மையில் நான் சொல்ல வந்ததே வேறு. நானும் நடிகன். எப்ப எங்க இருப்பேன்னு தெரியாமல் உள்ளூர் வெளியூர்னு ஷுட்டிங்ல இருப்பேன். என் மனைவியும் நடிகையா இருந்தால், அவங்களும் பிசியான நடிகையாக இருந்தால் சந்தோஷமா இருக்குமா? அந்த அர்த்தத்தில்தான் நான் நடிகையை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்னு சொன்னேன். அவ்வளவு ஏன், வேலைக்கு போகிற பெண்ணை கூட கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். போதுமா? என்கிறார்.
அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்...

No comments:

Post a Comment