மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday 1 January 2012

சிம்பு- தனுஷ்- யூ ட்யூப் 'சப்ப்ப்ப்பாஷ் சரியான போட்டி'


'சப்ப்ப்ப்பாஷ் சரியான போட்டி' என்று அத்தனை விரல்களையும் வாய்க்குள் நுழைத்து விசிலடிக்கிற அளவுக்கு இருக்கிறது சிம்புவின் Love Anthem (ஏக் தம்முல தனுஷை முந்திருவாரு போலிருக்கே)
கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கக் கூடாது என்றSimbuகோடம்பாக்கத்தின் சந்து-ஃபோர் சாக்ரடீஸ்களின் தத்துவத்தை பின்பற்றுகிறாரா, அல்லது ஒரேயடியாக தன் திறமையை காட்டி 'கொலவெறி' புகழை நசுக்க வேண்டும் என்று நினைத்தாரா தெரியவில்லை. இந்தLove Anthem செம டக்கர்.
இப்போது யூ ட்யூப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பாடலும், அதற்கு சிம்புவின் அசால்ட்டான டான்சும் ச்சும்மாச்சுக்கும்தானாம். விரைவில் முறையான மிக்சிங், சுவையான ஆட்டம் என்று இன்னும் இன்னும் மெருகேற்ற போகிறாராம் இந்த பாடலை. அதுமட்டுமல்ல, இந்த பாடலுக்கு சிம்புவோடு சேர்ந்து கொண்டு இன்னொரு உலக பிரபலமும் ஆடவிருக்கிறாராம். (நம்புங்க, எல்லாமே சிம்புவே சொன்னதுப்பா...)
போகிற போக்கை பார்த்தால் அடுத்த வருட இறுதியில் பிரதமரின் இயர் என்ட்டிங் பார்ட்டி சிம்புவுக்கும் இருக்குடோய்...

திரும்ப வைத்த படங்களும் திகைக்க வைத்த மக்களும் -2011 ல் ஒரு பிளா(ஷ்)க்பேக்!


வருஷத்தை பெருக்கி அள்ளி வாரிக் கொட்டும் போதுதான் தெரிகிறது, அதில் எத்தனை மாணிக்கங்களும் மரகதங்களும் குப்பையோடு குப்பையாக போனதென்று? ஒவ்வொரு வருடத்திலும் ஏதாவது சில நல்ல படங்கள் வெளியாவதும், பெட்டி செலவு, போஸ்டர் செலவு கூட தேறாமல் முடங்கிப் போனதும் நடந்து கொண்டே இருக்கிறது.
கட்டு சோற்றில் இருக்கிற ருசி, பர்கர்களிலும் பீட்சாக்களிலும் இல்லை என்பதுVaagai Sooda Vaaதெரிந்தே ஒரு கூட்டம் அந்த கடைகளை நிரப்பி வருகிறதே என்ற கவலையும் நம்மை தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கிற இந்த பலசரக்கு கண்றாவியை பற்றி வருஷ கடைசியில் எழுதி வயிற்றெரிச்சல் பட்டுக் கொள்வதுதானே நமது வழக்கமும்.
இவ்வளவு நல்ல படங்கள் ஓடாமல் போனதே என்ற வருத்தம் வருகிற மாதிரியே, இந்த குப்பையெல்லாம் ஓடித் தொலைத்ததே என்ற வருத்தமும் வந்து சேரும். 2011 ம் அப்படி பல அனுபவங்களை நமக்கு விதைத்த வருடம்தான்.
நேற்று வெளிவந்த 'மகான் கணக்கு' படத்தோடு முடிந்தது 2011 ல் சிறு படங்கள் தந்த பிரமிப்பு. ஓசிஓசி பேங்க் போன்ற பன்னாட்டு வங்கிகளால் பந்தாடப்படும் நடுத்தர வர்கத்தின் வலியை அப்படியே நம் மனசிலும் ஏற்றியிருந்தார் டைரக்டர் சம்பத் ஆறுமுகம். இதுபோன்ற கதைகளுக்கு பெரிய நடிகர்கள் டேட்ஸ் கொடுத்திருந்தால், சமுதாயத்தில் பெரிய புரட்சியே விதைக்கப்பட்டிருக்கும். ஹ்ம்ம்ம்ம்... அதற்கெல்லாம்தான் நமக்கு கொடுப்பினை இல்லையே?
ஜல்லிக்கட்டில் இறக்கிவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளை போல தத்தளித்துப் போன சில சிறு படங்களை கணக்கிலிருந்து விட்டுத் தள்ளினாலும், சில படங்கள் நம் நெஞ்சை விட்டு அகலாதவை.
களவாணியில் பெருமை சேர்த்த சற்குணம், பெரும் பொருட் செலவில் இயக்கியVengayamபடம்தான் வாகை சூடவா. பீரியட் பிலிம் வகையை சார்ந்த இந்த படம் சத்தியமான ஹிட் என்று ரசிகர்கள் காத்திருந்தால், ஐயகோ ஏமாற்றம். ஓட வேண்டிய படத்தை மக்கள் ஏன் கவிழ்த்து தொலைத்தார்கள் என்பதுதான் இந்த நிமிடம் வரைக்கும் புதிர். இந்த ஒரு படத்திலேயே தமிழ்சினிமாவின் நிகழ்கால சாவித்ரியானார் ஹீரோயின் இனியா.
சங்ககிரியிலிருந்து குடும்பதோடு வந்து கோடம்பாக்கத்தை மிரள வைத்தார் ராச்குமார் என்ற இளைஞர். வெங்காயம் படத்தின் மூலம், பெரியாருடைய சிந்தனைகளை அழகாக எடுத்துச் சொல்லியிருந்தார். இப்படத்தின் தயாரிப்பும் இவரே, முக்கியமான கூத்துக்காரர் கேரக்டரில் இவரது அப்பாவும் நடித்திருந்தார். படத்தில் நடித்த அத்தனை பேரும் இவரது சுற்றுப்பட்டு கிராமத்து சொந்தங்கள்தான். 'வீடு வயல் நிலத்தையெல்லாம் வித்துட்டுதான் இந்த படம் எடுக்கிறேன். ஓடலைன்னாலும் பரவாயில்லை. கை கால் நல்லாயிருக்கு. சம்பாதிச்சுக்கலாம்' என்று தன்னம்பிக்கையோடு இந்த இளைஞர் பேசியதை உணர்ச்சிப் பெருக்கோடு கவனித்தார்கள் பலரும். இந்த படத்தை எப்படியாவது மீண்டும் திரையிட்டு ஓட வைத்துவிட வேண்டும் என்று மெனக்கட்ட டைரக்டர் சேரன், நடிகை ரோஹிணி ஆகியோருக்கு இந்த நேரத்திலாவது நன்றி சொல்ல வேண்டியது நம் கடமை. 2012 லாவது மறு ரிலீஸ் செய்வார்கள் என நம்புகிறேன்.
ரசிகர்களுக்கு ராஜ'பட்டை' போட்ட சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'அழகர்சாமியின்Rajapattaiகுதிரை' இன்னுமொரு முறை கவலையை ஏற்படுத்திய படம் நல்ல சினிமா ரசிகர்களுக்கு. நாவலை படமாக்குகிற இயக்குனர்கள் அருகி வரும் நேரத்தில் சுசீந்திரனின் இந்த முயற்சிக்கு கை கொடுக்காமல் போன மக்களின் மீது மறுபடியும் ஒரு சாப சர்ப ஆயுதத்தை வீசுவது தவிர வேறு வழியில்லை. இந்த படம் ஓடியிருந்தால், சுசீந்திரன் 'பட்டை'யை நோக்கி போயிருக்க மாட்டார் என்பதும் என் யூகம்.
பாரதிராஜாவை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தோம் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளும் அநேக மாணவர்கள் அவரை மிஞ்சிய ஸ்டூடண்ட்டாக இருக்கிறார்களே என்ற வியப்பை ஏற்படுத்தினார் டைரக்டர் சீனு ராமசாமி. இவரது 'தென்மேற்கு பருவக்காற்று' படமும் வசூலை பொறுத்தவரை முக்கல் முனகல் ரகம்தான். ஆனால் தமிழ்சினிமாவுக்கே பெருமை ஏற்படுத்திய படம். இதற்கு தேசிய விருதுகளை அளித்து பழி பாவத்திலிருந்து தப்பித்துக் கொண்டது மத்திய அரசு.
அதிக பாராட்டுகளை பெற்ற இன்னொரு படம் 'எங்கேயும் எப்போதும்'. நல்லவேளை,Engeyum Epothumஇந்த படத்தையாவது ஓட வைத்தார்கள் ரசிகர்கள்! இப்படத்தின் மூலம் எவர் க்ரீன் நடிகையாக பிரமோஷன் ஆனார் அஞ்சலி. எவரையும் உருப்பட விடாத சில ஹீரோக்கள், 'வாங்க மசாலா கிண்டலாம்' என்று எ.எ இயக்குனர் சரவணனை அழைக்கக்கூடும். அப்போது மட்டும் உஷாராக இருந்தால் போதும். தமிழ்சினிமாவுக்கு இன்னும் நல்ல படங்கள் இவரால் கிடைப்பது உறுதி.
நவீன கால பீம்சிங் என்று அழுகாச்சி ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட ராசு.மதுரவனுக்கும் ஒரு இடம் தரலாம் இந்த வருடத்தில். மற்றபடி குள்ளநரிக்கூட்டம், வர்ணம், நர்த்தகி என்று குறிப்பிட்டு சொல்ல மேலும் சில படங்கள் இருக்கின்றன. பாவம் இப்படங்களையும் தோல்வி லிஸ்ட்டில் வைத்துதான் தேம்ப வைத்தார்கள் பாழாய் போன இந்த படுபாவி ரசிகர்கள்.
-ஆர்.எஸ்.அந்தணன்

மங்காத்தா படத்திற்குதான் முதலிடமா? 2011 பற்றி ஒரு அலசல்


தியேட்டர் கேன்டீனில் சுட சுட வைக்கப்பட்ட மசால் வடை, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தன் ஆவியை போக்கிக் கொள்வதை போல, உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் சில படங்களும் நாலாவது ரீலிலேயே தனது ஆவியை போக்கிக் கொள்ளும். ஆனால் அதே படத்தை வரலாறு காணாத வசூல் என்று விளம்பரப்படுத்துவார்கள். அதையும் நம்பி நமக்கு கமெண்ட் அனுப்பி கவலைப்படுவார்கள் ரசிகர்களும் வாசகர்களும்.Mankatha(ராஜபாட்டையை தோல்விப்படம் என்று நாம் எழுதியது பொறுக்க முடியாத வாசகர்கள் சிலர், முதல் சில நாட்களிலேயே வசூல் 42 கோடியை கிராஸ் பண்ணிவிட்டது. அது தெரியுமா உங்களுக்கு? என்றெல்லாம் எழுதுவதை படித்தால், ஐயோ பாவம் என் அறியா ஜனங்களே என்று கவலைப்படவே தோன்றுகிறது)
கடந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் என்று 'மங்காத்தா' படத்தைதான் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றன சில ஊடகங்களும், மற்றும் சில விமர்சகர்களும். அப்படி எழுதுவதற்கு முன் குறிப்பிட்ட அந்த படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் ஆகிய மூவருக்குமே லாபத்தை ஏற்படுத்திய படமா என்று விசாரித்து எழுதினால் புண்ணியமாக போயிருக்கும். இந்த இடத்தில் வசூலையும் முதலீட்டையும் ஒப்பிட வேண்டியதும் மிக மிக முக்கியம்.
நு£று கோடி செலவு செய்து பத்து கோடி லாபம் பார்க்கிற படத்தைவிட, ஏழு கோடி செலவு செய்து பத்து கோடி லாபம் பார்க்கிற படம்தான் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற உண்மையை புரிந்து கொள்ள கணக்கில் சூரப்புலியாக இருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை.
சரி... மங்காத்தா மேட்டருக்கு வருவோம். கோடம்பாக்கத்திலிருக்கும் சில வியாபார புள்ளிகளிடம் விசாரித்தால் நமக்கு கிடைக்கிற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த படம் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கத்திற்கும் பெருத்த லாபத்தை பெற்றுக் கொடுத்தது உண்மையே. ஆனால் தயாரிப்பாளருக்கு சுமார் ஏழு கோடி நஷ்டமாம்.
கடந்த வருடத்தில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர் ஆகிய மூன்று தரப்புக்கும் லாபத்தை கொட்டிக் கொடுத்த படங்கள் என்று எடுத்துக் கொண்டால் நான்கே நான்குதான். காஞ்சனா, கோ, சிறுத்தை, மற்றும் எங்கேயும் எப்போதும். இந்த நான்கு தவிர வெளிவந்து வெற்றி பெற்ற படங்களில் சில இந்த மூவரில் ஒருவரை நுரை தள்ள வைத்த படங்கள் என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மை.
இப்படி ஒரு குழப்பமான வெற்றியை தந்த படங்கள்தான் வேலாயுதமும், 7 ஆம் அறிவும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
அசல் மட்டும் தேறிய படங்களில் ஒன்று போராளி. கடந்த வருடத்தில் அதிசயமாக தேறிய டப்பிங் படம் ஒன்று மாவீரனாம். இதுவும் விநியோகஸ்தர் ஒருவர் சொல்கிற கணக்குதான்.
கூட்டி கழித்து குப்புறத் தள்ளி, நிமர்த்தி வளைத்து படுக்க வைத்து பார்த்தாலும் 2011 ன் லட்சணம் டாப் 5 என்ற அளவிலேயே நின்று போனதுதான் வேதனை கலந்த ஆச்சர்யம்.
-ஆர்.எஸ்.அந்தணன்