மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday 28 December 2011

மணிரத்னம் ஆபிசில் பசுபதி ரகசியம் காக்குறாங்களாமா...


கூத்துப்பட்டறை நடிகர்களை கொல்லன் பட்டறை இரும்பு போலவே பயன்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள். அவ்வளவு அடி மற்றும் நொறுக்குதலும் இவர்களுக்குதான் கிடைக்கிறது அடுக்கடுக்காக.
பெரும் எதிர்பார்ப்போடு தமிழ்சினிமாவில் வீறு நடை போட்ட பசுபதி ஒருPasupathiகூத்துப்பட்டறை தயாரிப்புதான். ஆனால் இவராகவே வெட்டிக் கொண்ட குழியா, அல்லது மண்வெட்டியோடு மெனக்கட்டு வந்தார்களா தெரியாது. சில பல இயக்குனர்களால் வெகு சீக்கிரத்தில் காணாமல் போனார் பசுபதி. நல்லவேளையாக அரவான் படத்தில் முக்கியமான ரோல் கொடுத்து இவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் வசந்த பாலன்.
இந்த நேரத்தில்தான் இன்னொரு நல்ல செய்தி வந்திருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் பசுபதியை தனது அலுவலகத்திற்கு அழைத்தாராம் மணிரத்னம். தற்போது இயக்கவிருக்கும் பூக்கடை படத்தில் முக்கிய ரோல் இருப்பதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம்.
அரசல் புரசலாக கசிந்த தகவலையடுத்து பலரும் பசுபதிக்கு போன் செய்து அப்படியா என்று கேட்டால், அப்படியா என்கிறாராம் அவரும் அதே பிரமிப்புடன். வேறொன்றுமில்லை, இங்கு வந்துட்டு போன விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றாராம் மணி.
ஐஸ்வர்யா ராய் நடிச்சாலே அலட்டிக் கொள்ளாத ஆட்களுக்கு, மணி அண்டு பசுபதியின் இந்த ரகசிய காப்பு பிரமாணம் ங்கொய்யென்று சிரிக்க வைக்கிறது.

அஞ்சலியின் சிறப்பு கொள்கை புதுமுக நடிகர்கள் நெகிழ்ச்சி


பசி நேரத்தில் பிள்ளையார் சுழி போட்டாலும், அது கொழுக்கட்டை வடிவத்தில்தான்Anjaliஇருக்கும். மனம் போலதான் மற்றதெல்லாம் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இது. இதை அப்படியே பின் பற்றுகிறார் அமலா பால். தன்னுடன் ஆரம்பத்தில் நடித்த சின்ன சின்ன நடிகர்களை எங்காவது பார்த்தாலோ, அல்லது அவர்கள் போன் லைனில் வந்தாலோ கூட மதிப்பதில்லையாம். இதை சொல்லி சொல்லி புலம்புகிறார்கள் வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் இவருடன் நடித்த ஹீரோக்கள்.
ஆனால் அஞ்சலி அப்படியல்ல. இன்னமும் இவரது மனப் புத்தகத்தில் புதுமுகங்களுக்கு இடம் இருக்கிறது. நல்ல கேரக்டர் வந்தா போதும். அதுல யாரு எனக்கு ஜோடியா நடிக்கிறாங்கன்னு நான் பார்ப்பதே இல்லை என்கிற அஞ்சலி, இப்போது விக்ரமுடன் கரிகாலன் படத்தில் நடிக்கிறார். அமலாவும் விக்ரமுடன் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் தனது பழைய நண்பர்களை எடைக்குப் போட்டு பேரீச்சம் பழம் வாங்கினார்.
ஆனால் விக்ரமுடன் நடித்துக் கொண்டிருக்கும் போதே, மதன் என்ற புதுமுகத்துடன் ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டார் அஞ்சலி. இந்த மதன் இதுதாண்டா போலீஸ் ராஜசேகரின் சகோதரி மகன் என்கிறார்கள்.
எது எப்படியோ, அஞ்சலியின் சிறுமுதலீட்டு கொள்கைக்கு ஒரு சிறப்பு வணக்கம்.

பிரதமர் தரப்போகும் விருந்து தனுஷ் உற்சாகம்


கொலவெறிக்கான பேடன்ட் ரைட்ஸ் வடிவேலுவிடம் இருக்க, பரிசுகளை அள்ளிக்Dhanush - Manmohan Singhகொண்டு போகிற வேலையை மட்டும் பார்க்கிறார் தனுஷ். இந்த கொலை வெறியின் உச்சத்தை கண்டும் காணாமல் இருக்க வேண்டிய நிலைமைதான் வடிவேலுவுக்கு. ஆனால் தனுஷ் இது பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. நாளொரு அழைப்பும், பொழுதொரு பேமென்ட்டுமாக அள்ளிக் கட்டிக் கொண்டிருக்கிறார் மனுஷன்.
இதோடு முடிந்திருந்தால் கூட ஆச்சர்யம் இல்லை. பிரதமரே இவரை விருந்துக்கு அழைத்திருக்கிறாராம். ஒவ்வொரு வருட இறுதியிலும் நாடெங்கிலும் உள்ள முக்கியமான விஐபிகளுக்கு விருந்தளிப்பார் பிரதமர். இந்த முறையும் அப்படி விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பட்டியலில் தனுஷின் பெயரும் இருக்கிறது.
இந்த திடீர் செல்வாக்குக்கு காரணம், கொலவெறிடிதான் என்பது சொல்லாமலே புரிந்திருக்கும். இந்த விருந்தில் வடக்கத்திய நட்சத்திரங்கள் பலரும் வருவார்கள். நான் இயக்கும் முதல் படம் இந்தியில்தான் என்று கூறி வரும் தனுஷுக்கு இந்த விருந்து ஏராளமான வரவுகளை அள்ளித்தரும் இடமாக இருக்கும்.

மம்பட்டியான் - விமர்சனம்

தியாகராஜன் ஹீரோவாக நடித்த அதே மம்பட்டியான்தான் இதுவும். தார்ப்தியாகராஜன் ஹீரோவாக நடித்த அதே மம்பட்டியான்தான் இதுவும். தார்ப்பாயை கிழித்து தடுக்காக தைத்த மாதிரி கச்சிதமான மாற்றங்களோடு உறுமியிருக்கிறார் இந்த மம்பட்டியானும். பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் தகப்பனை மிஞ்சிய தனயனா என்றால் ஒரு சின்ன ஹி...ஹி..தான் நமது பதில். ஜெயமாலினி வேடத்தில் முமைத்கான். சரிதா கேரக்டரில் மீராஜாஸ்மின் என்று நாதஸ்வரத்துக்கும் மவுத்தார்கானுக்கும் இருக்கிற வித்தியாசம் இருக்கிறது எல்லாவற்றிலும்.
Mambattiyanதனது நேர்மையான தந்தையை கொன்றவர்களை வெட்டி சாய்த்துவிட்டு காட்டுக்குள் பதுங்கிவிடுகிறார் மம்பட்டியான் பிரசாந்த். அங்கிருந்து கொண்டே ஊர் மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்கிறார். ஒருபுறம் போலீஸ் தேடிக் கொண்டே இருக்கிறது. இருமுறை சிக்கிக் கொள்ளும் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களுக்கும் அல்வா கொடுக்க, எப்பிடிறா பிடிப்பாய்ங்க என்கிற ஆவலை கிளறி விடுகிறார் இயக்குனர் மம்பட்டியான். (இதுவும் தியாகராஜன்தான், தெரியுமோ? )
‘வரலாற்றில் என் பெயர் இருக்கும். என்னை தேடிகிட்டே இருப்பீங்க’ என்று போலீசிடம் சவால் விடும் மம்பட்டியான் கடைசியில் செத்துப்போவது கூடவே திரியும் ஒரு கரப்பான்பூச்சியால் என்பதுதான் திடுக்கிடும் திருப்பம். (இந்த கேரக்டரில் நடித்திருக்கும் நடிகருக்கு நிஜமாகவே முகத்தில் பால் வடியுது)
மகனை அப்பாவே இயக்கும்போது நேர்கிற அத்தனை சங்கடங்களும் படத்தில் இருக்கிறது. ஆனால் துருத்திக் கொண்டு தெரியவில்லை. உதாரணமாக பதற வேண்டிய நிர்பந்தங்களில் கூட பிரசாந்த் புன்னகைத்துக் கொண்டே அவற்றை எதிர்கொள்கிற காட்சிகளை சொல்லலாம். சரித்திர புருஷர்களுக்குரிய மடேர் மடேர் தோள்களும், அவற்றை மறைக்கும் கருப்பு போர்வையுமாக பிரசாந்த் திரிவது, காட்டு சிங்கம் போன்ற கம்பீரம் தருகிறது. மெல்ல மீராஜாஸ்மினின் காதலில் அவர் விழுகிற காட்சிகளும் பூ மலர்வது போல அழகு. குறிப்பாக ஒரு விஷயத்தை பாராட்டலாம். அது பிரசாந்தின் டப்பிங்குக்காக. அந்த கரகர அடித்தொண்டை குரலுக்காக எத்தனை ஹால்ஸ் மற்றும் இஞ்சி மரபாக்களை முழுங்கினாரோ?
ஒரு போலீஸ் அதிகாரியை பிரசாந்த் அடித்து துவைத்து அரை உயிராக மரத்தில் கட்டி வைத்து கழுகுக்கு இரையாக்கும் அந்த தந்திரம் குரூரம் என்றாலும் அபாரம். பிரகாஷ்ராஜ் கைகளில் சிக்கி, கடைசியில் அவர் கழுத்தை சுருக்கிட்டு தப்பிக்கும் இன்னொரு காட்சியிலும் தியேட்டரை அதிர வைக்கிறார்கள் தந்தையும் மகனும்.
24 கேரட் தங்கம் மம்பட்டியானை அவசரப்பட்டு குறை சொல்லிவிட்டோமே என்ற பதற்றத்தில் தன்னையே தாரை வார்க்கும் மீராஜாஸ்மினின் காதலும், நியாயமும் ஒரு ஆற்றங்கரையில் சமாதியாவதுதான் சோகம்.
அப்போதுதான் ஜிம்முக்கு போய் ‘பெஞ்ச் பிரஸ்’ செய்துவிட்ட வந்த மாதிரி படம் முழுக்க திறந்தே கிடக்கிறார் முமைத்கான். இந்த திறந்தவெளி சந்தோஷமே சீக்கிரம் டிக்கெட்டுகளை விற்க வைத்து கவுன்ட்டர்களை ‘மூட’ வைக்கும்.
ஒரு சில காட்சிகளே வந்தாலும், பிரகாஷ்ராஜின் பாணி வழக்கம் போல பலே பலே...
பல மாதங்கள் கழித்து திரையில் உலா வருகிறது வைகைப் புயல். சீறும் என்று நினைத்தால் சீலிங் ஃபேன் கெட்டது போங்கள்...
மேக்கப் கலைமாமணி சுந்தரமூர்த்தி என்கிறது டைட்டில். ஆனால் குளத்தில் மூழ்கி எழுந்தால் கூட முகச்சாயம் கலையாமல் எழுகிறார்கள் அத்தனை பேரும். என்ன கலைமாமணியோ?
தமனின் இசையை அலுத்துப் போகாமல் செய்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. இவரது காட்டு வழி போறப் பெண்ணேவையும், சின்ன பொண்ணு சேலையையும் ரிப்பீட் அடித்திருக்கிறார் தமன். ஆயிரம் இருந்தாலும் பழசு பழசுதான்...
ஷாஜி குமாரின் ஒளிப்பதிவை மேலும் அழகாக்கியிருக்கிறது டிஜிட்டல் இமேஜ்.
அருவா அதேதான். ஆத்திரமும் அதேதான். சாணை பிடித்த விதத்தில்தான் சற்றே சற்று சறுக்கல்...
-ஆர்.எஸ்.அந்தணன்

அடுத்த வருடமாவது என்னை... நடிகர் சூர்யா ஆசை

பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராம் அழகான படங்கள் அடங்கிய 2012 வருட காலண்டரை வெளியிட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவும், நடிகை சமீரா ரெட்டியும் கலந்து கொண்டு காலண்டரை வெளியிட்டனர்.
ஏ.வி.எம்-ல் நடந்து வரும் ‘மாற்றான்’ படப்பிடிப்பிற்கு இடையில் நிகழ்ச்சி நடைபெறும் 2012 Calendar releaseஹயாத் ஓட்டலுக்கு வந்திருந்தார் சூர்யா. ஒரு நடிகர் தான் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இடையில் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றாலே, அந்த நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர் குறிப்பிட்ட நடிகருக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தராக இருப்பார்?
ஆமாம்... நடிகர் நடிகைகளை பொருத்தவரை சாதாரணமானவரல்ல இந்த வெங்கட்ராம். சிம்புவில் ஆரம்பித்து கமல் ரஜினி வரைக்கும் கூட இவரது கேமிரா முன் நின்றவர்கள்தான். அதுமட்டுமல்ல, இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று இந்திய மொழிகள் அத்தனைக்கும் முக்கியமான புகைப்படக் கலைஞர் இந்த வெங்கட்ராம்.
காலண்டரை வெளியிட்ட சூர்யா, இந்த வருடம் நடிகைகளை மட்டும் காலண்டருக்கு பயன்படுத்தியிருக்கிறாரே என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நான் வெங்கட்ராமுக்கு தொடர்ந்து போன் அடித்தேன். அவர் எடுக்கவே இல்லை. எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். அதுக்கும் பதில் இல்லை. என் ஐபோன்ல ஒரு வசதி இருக்கு. அது மூலமா நண்பன் எங்க இருக்காருன்னு கண்டு பிடிச்சேன். அப்புறம்தான் இப்படி ஒரு வேலை போயிட்டு இருக்குன்னு தெரிய வந்துச்சு. அடுத்த வருடமாவது என்னையெல்லாம் எடுத்து காலண்டர்ல போடணும் என்றார்.
இந்த காலண்டரில் த்ரிஷா, சமீரா ரெட்டி, சமந்தா, அமலா பால், ஜெனிலியா, தீக்ஷா சேத் ஆகியோர் போஸ் கொடுத்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சியில், இந்த புகைப்படங்களை வெங்கட்ராம் படமாக்குவதையும் படமெடுத்து காண்பித்தார்கள். அதையே ஒரு படமாக ஓட்டினால் கூட ஐம்பது நாளை கிராஸ் பண்ணும் போலிருந்தது. அத்தனை சுவாரஸ்யம்...

போகதான் போகிறோம் சங்கீதா-க்ருஷ் பிடிவாதம்

ஸ்விட்சர்லாந்தில் நடைபெறவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு செல்லக் Krish - Sangeethaகூடாது என்று தமிழ்நாட்டில் பிரச்சனை கிளம்பியதையும், இதையடுத்து அங்கு செல்வதாக இருந்த ஜீவா பின்வாங்கியதையும் பலரும் அறிவர். முதலில் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதாக முடிவெடுத்திருந்த சங்கீதாவும் அவரது கணவர் க்ருஷும் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார்கள் இருவரும்.
நாங்க கலைஞர்கள். உலகம் முழுவதும் சென்று நிகழ்ச்சி நடத்துவது எங்களுக்கு புதிதல்ல. இந்த நேரத்தில் சுவிஸ் தமிழ் அமைப்புகளுக்குள் நடக்கிற அரசியலில் எங்களை சிக்க வைப்பது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. தமிழ்நாட்டில் கூட புத்தாண்டு தினத்தன்று சுமார் ஆறு ஏழு குழுவினர் நடிகர் நடிகைகளை அழைத்து அவர்களுக்கு விருது தருகிற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அதுபோலதான் அங்கும் நடக்கிறது. அவர்களுக்குள் நடக்கிற போட்டியில் ஒரு குழுவினரை இலங்கை அரசுக்கு ஆதரவானவர்கள் என்று சித்தரிக்கும் வேலையை இன்னொரு குழு செய்கிறது.
சுவிஸ் நாட்டுக்கு செல்வது பற்றி நாங்கள் எங்கள் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் பேசினோம். அவர் இலங்கைக்கு செல்லவில்லையே, சுவிஸ்தானே போகிறீர்கள்? தாராளமாக போய் வாருங்கள் என்று கூறியிருக்கிறார். நாங்கள் இருவரும் கடந்த வருடம் கூட இதே குழுவினரின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தேன். அவர்கள் நல்லவர்கள் என்பதை கண்கூடாக பார்த்தவள் நான். எனவே இந்த நிகழ்ச்சிக்கு நான் மனப்பூர்வமாக செல்லதான் போகிறேன் என்றார் சங்கீதா.
மிரட்டலுக்கும் அவதுறுக்கும் பயந்து நாங்கள் போவதை நிறுத்தினால், அடுத்தடுத்த வருடங்களில் இதையே முன்னுதாரணமாக வைத்து இங்குள்ள நடிகர் நடிகைகளின் வருகையை தடுக்க நினைப்பார்கள். அதனால்தான் தைரியமாக இந்த பயணத்தை மேற்கொள்கிறோம் என்றார்கள் க்ருஷும் சங்கீதாவும்.
பார்வைக்கு தெரியுற நிலா பளபளன்னு இருந்தாலும் பக்கத்தில் போனால்தான் காடுமேடு தெரியும். நமக்கென்ன, இரு தரப்பு சொல்வதையும் கேட்டுக் கொள்வதை தவிர வேறு வழி?

ராஜபாட்டை - விமர்சனம்

Mambattiyanஅன்னா ஹசாரேவின் லேட்டஸ்ட் உண்ணாவிரதம் போல, எதிர்பாராத அதிர்ச்சிதான் இந்த ராஜபாட்டை. (அவ்ளோ பெரிய மைதானத்தில் 100 பேர் தேறலயாமே?) வெ.க.கு, அ.சா.கு, நா.ம.அ என்று நல்ல நல்ல படங்களை இயக்கிய சுசீந்திரனுக்கு வந்த திடீர் மசாலா ஆசை கோடம்பாக்கத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை எழுதினால் அது இன்னொரு டிசம்பர் இருபத்தியாறாகிவிடும் என்பதால் விமர்சனத்திற்குள் செல்வோம்.
அநாதை ஆசிரமம் நடத்தி வரும் பெரியவர் விஸ்வநாத்திடமிருந்து அந்த இடத்தை அபகரிக்க துடிக்கிறார் பெண் அரசியல்வாதி ஒருவர். இதற்கு பெரியவர் மகனும் உடந்தை. ஆசிரமம் கைமாறினால் அத்தனை குழந்தைகளும் நடுத்தெருவில்தான் என்பதால் தன்னையறியாமல் கோதாவில் குதிக்கும் விக்ரம், தன் ஒற்றைக் கையால் மிஷின் கன் வில்லன்களை கூட பந்தாடுகிறார். பெரியவர் வெளியில் இருந்தால்தானே கையெழுத்து போட முடியும்? அவரையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுகிறார். கொலைவெறியோடு துரத்தும் கும்பல் விக்ரமின் லவ்வர் தீக்ஷாவையும் கடத்துகிறது. எப்படியோ, இடம் கைமாறி பிள்ளைகள் எல்லாம் நடுத்தெருவுக்கு வருகிறார்கள்.
இதற்கிடையில் சொத்துக்கு ஆசைப்பட்டுதான் தன் மீது அன்பு காட்டுகிறார் விக்ரம் என்று முடிவு செய்யும் விஸ்வநாத் அவரிடமிருந்து பிரிய, அடுத்தது என்னாச்சு என்பதுதான் மிச்ச மீதி. 
சங்கராபரணம் விஸ்வநாத்தை ‘சங்கட’ புராணம் பாட வைத்திருக்கிறார்கள். எப்படி லவ் பண்ணுவது என்று அவர் விக்ரமுக்கு கிளாஸ் எடுப்பது ரொம்பவே ஓவர் என்றாலும், ரசிக்க முடிவதுதான் ஆச்சர்யம். மனைவியின் சிலையை புல்டவுசர் கொண்டு தகர்க்கும்போது அவர் கண்களில் வழியும் கண்ணீர் நம்மை ஃபீல் பண்ண வைக்கிறது.
ஜிம் பாய் என்பதால் மற்றொரு பிரசாந்த் போல உடம்பேறியும் முறுக்கேறியும் திரிகிறார் விக்ரம். எழுபது வயதில் அமிதாப்பச்சனையும், அதே வயதில் எம்.ஜி.ஆரையும் பார்த்த நமது கண்களுக்கு ஐம்பத்தைந்து வயதில் ஏன் இப்படி முதுமை தட்டிப் போனார் விக்ரம் என்பதை நினைத்தால் கவலையாகவே இருக்கிறது. (சில குளோஸ் அப்புகளை தவிர்த்திருக்கலாமே மதி?) படத்தில் வரும் ஏராளமான மாறுவேட காட்சிகளுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது. ஆனால் அவையெல்லாம் ஒரு கேரக்டர்களாக உலவ முடியாமல் போனதும் வருத்தமே.
விக்ரம் எபிசோடில் நம்மை அதிகம் ரசிக்க வைத்தது தீக்ஷாவை தேடி ஒவ்வொரு லைட் கம்பமாக அவர் அலைகிற காட்சிதான். கடைசியில் எப்படி கண்டுபிடித்தார் என்பதும் சுவாரஸ்யமான சீன் பின்னல்.
இந்தகால அரசியல் பிரபலம் ஒருவரை நினைவுபடுத்துகிறார் அந்த பொலிட்டீஷியன் சனா. அவ்வளவு பெரிய ஊர்வலத்தில் தன்னருகில் வந்து குத்தல் காட்டிவிட்டு போகும் விக்ரமை, கோபமும் சிரிப்பும் கலந்த பார்வையோடு கொன்று போடுகிற சனாவின் கண்களுக்கும் உதடுகளுக்கும் தனித்தனியாக விருது பத்திரம் எழுதித்தரலாம்.
ஆறடி உயர அரளிப்பூவாக தீக்ஷா சேத். அதிகம் வேலை இல்லை இவருக்கு. அதனால் நாமும் அதிகம் பேச வேண்டியதில்லை.
முப்பது கோடிகளுக்கும் மேல் செலவு செய்து எடுக்கிற படத்தில் வடிவேலு, விவேக், சந்தானம் கூட வேண்டாம். அட்லீஸ்ட் சத்யன் கூடவா சிக்கவில்லை. இவர்கள் செய்ய வேண்டிய வேலையை வில்லன் நடிகராக பல படங்களில் வந்து போன அருள்தாஸ் செய்திருக்கிறார். உஸ்ஸ்ஸ்...
எல்லாரும் கோவக்காய். நான் மட்டும் ஏலக்காயா? என்று தனது பங்குக்கு சண்டித்தனம் செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜாவும்.
விக்ரமுக்கு ஆறாவது தோல்வி என்பதுதான் நமது ‘ஆறாத’ கவலையும்.
-ஆர்.எஸ்.அந்தணன் 
                                                              WWW.TAMILCINEMA.COM

Sunday 18 December 2011

பாடகரின் 'பிலை' தாமரையின் நிலை

இன்னும் இரு தினங்களில் ஆடியோ ரிலீஸாகவுள்ள ’முப்பொழுதும் உன் thamaraiகற்பனைகள்’ ஆடியோவில் ஒரு சுவாரசியமான தவறு நடந்தது. பாடலாசிரியர் தாமரை எழுதியிருந்த ஒரு பாடலை பாடகர் தவறான உச்சரிப்புடன் பாடிச்சென்றுவிட்டார். ரெகார்டிங் முடிந்து பாடகரும் சென்று விட்டார். அண்மையில் தான் ரசித்து எழுதிய பாடலாச்சே, எப்படிப் பாடியிருக்கிறார்கள் என்று கேட்கப்போனபோது அவருக்கு பேரதிர்ச்சி. ஒரு வார்த்தையை ‘பிலையாக’ பாடியிருந்தார் பாடகர். மொத்த ரெகார்டிங்கும் முடிந்துவிட்டது, ஒரு வார்த்தை தவறாகப் போனதற்காக மீண்டும் யார் ரெகார்டிங் என்ற தயக்கம் ஒருபுறம் தன் மனதில் பட்டதை அப்படியே தயாரிப்பாளரின் காதில் போட்டுவிட்டுப் போய்விட்டாராம்.
ஆச்சரியம். ஆனால் உண்மை அந்த ஒரு வார்த்தைக்காகவே மீண்டும் ரெகார்டிங் வைத்து,தாமரையின் மனமும்,தமிழின் மனமும் குளிருபடி நடந்து கொண்டாராம் தயாரிப்பாளர்.

மணியா இருந்தாலும்... சுஹாசினி சமாளிப்ஸ்...

சென்னை சர்வதேச திரைப்படவிழாவை ஒட்டி இவ்வளவு சர்ச்சைகள் கிளம்பும் என்று suhasini maniratnamசுகாசினியே சற்றும் எதிர்பார்க்கவில்லை. சுகாசினியும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து இந்தோ ஃபிலிம் அப்ரிசியேஷன் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்கள். அந்த அமைப்பின் ஒன்பதாவது சர்வதேச திரைப்படவிழா டிசம்பர் 14 அன்று சென்னையில் துவங்கியது. இதில் திரையிட ஆடுகளம், அவன் இவன், முரண், உட்பட சில தமிழ்ப்படங்களைத் தேர்வு செய்திருந்தார்கள். இந்தப்பட்டியலில் தங்கள் படம் இடம் பெறவில்லை என மூன்று தேசிய விருதுகள் பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் இயக்குனர் போர்க்கொடி தூக்க, அவரோடு செங்கடல்’ படத்தின் இயக்குனர் லீனாமணிமேகலையும் சேர்ந்துகொண்டார்
இவர்களுக்கு சப்போர்ட்டாக நின்று, விழாவைப் புறக்கணிப்பதாக இயக்குனர்கள் சங்கம் அறிவித்ததும், சுகாசினிக்கு இன்னும் தர்ம சங்கடமாகப் போய்விட்டது.
நாங்கள் வெப்-சைட்டில் விளம்பரம் கொடுத்தபோது,எங்களைத்தொடர்பு கொள்ளாதது அவர்கள் தவறு. இதே தவறை என் கணவர் மணிரத்னம் செய்திருந்தாலும் அவர் படம் இந்த விழாவில் இடம் பெற்றிருக்காது என்று மீடியாவின் வாயை அடைத்துவிட்டார் சுஹாசினி.

காலண்டர் விழா கண்கலங்கிய த்ரிஷா


Trishaசெல்லப்பிராணிகள் என்றால் த்ரிஷாவுக்கு கொள்ளைப்பிரியம் என்பது கோடம்பாக்கம்அறிந்த சங்கதி. இந்தப் பிரியம் பணக்கார பிராணிகள் மிது மட்டுமல்ல,தெருவில் சுற்றுகிற ஏழைப்பிராணிகள் மீதும்தான் எனக்கு இருக்கிறது என்கிறார் த்ரிஷா.
காரில் ஷூட்டிங் போகும்போது பலமுறை, தெருவில் அடிபட்டு சுற்றிக் கொண்டிருக்கும் பூனை, நாய்களைப் பார்த்து வேதனைப்பட்டிருக்கிறேன். இவற்றிற்காக யாராவது ஒரு அமைப்பு ஏற்படுத்தி உதவ முன் வரமாட்டார்களா என்று ஏங்கியிருக்கிறேன். இப்போது அப்படி ஒரு அமைப்பு துவக்கப்பட்டிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் த்ரிஷா இப்படி பேசிய இடம் ராயப்பேட்டை அமிதிஸ்ட் காபி ஷாப்.
காபி ஷாப்புல போய் ஏன் இதப்பேசனும்? என்று கன்பியூஸ் ஆகவேண்டாம்.’கேட் சென்னை அடாப்சன் செண்டர், அதாவது தெருநாய் பராமரிப்பு அமைப்பின் காலண்டர் வெளியீட்டு விழா இங்கேதான் நடந்தது. அதில் கலந்து கொண்டுதான் மேற்கண்டவாறு உணர்ச்சி வசப்பட்டார் த்ரிஷா.

கவுதம்-மணிரத்னம் படத்தில் மோகன்பாபுவின் மகள்?


கடந்த வாரம் ராமநாதபுரம் ராமேஸ்வரம் பகுதிகளுக்கு தனது உதவியாளர்களுடன்Manju Lakshmiசென்று லொகேஷன் பார்த்து விட்டு திரும்பியிருக்கிறார் மணிரத்னம்.
தனது புதிய படத்துக்கு ‘பூக்கடை’ என்று பெயர் வைத்திருக்கும் மணிரத்தினம்,படத்தின் ஹீரோ,ஹீரோயின் யார் என்று இதுவரை உறுதி செய்யவில்லையாம்,ஆனால் மீடியாக்களில் கார்த்திக்கின் மகன் கவுதம் பெயரும், ராதாவின் மகள் கார்த்திகா பெயரும் அடிபட்டுகொண்டிருக்கிற்து நேற்று முதல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் மகள் மஞ்சு தான் மணிரத்தினம் பட ஹீரோயின் என்று புதிதாக ஒரு செய்திவேறு உலா வந்துகொண்டிருக்கிறது.
மணிரத்தினம் வட்டாரத்தில் விசாரித்தபோது, இசை ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு ராஜிவ்மேனன் எனற இந்த இரண்டு செய்திகளை தவிர வேறு எதுவுமே உறுதி செய்யவில்லை என்கிறார்கள். தனது படத்தை பொறுத்தவரை மணிரத்தினம் என்றுமே மவுனரத்தினம்தான்.

ஸ்ருதியை அழ வைத்த கமல்!

உலக நாயகன் தனது மூத்த மகள் ஸ்ருதியை கண்ணீர் சிந்த வைத்துள்ளார். என்னடா கமல்ஹாசன் எதற்காக தனது செல்ல மகளை அழ வைத்தார் என்று தானே நினைக்கிறீர்கள். விஷயம் இருக்கு. ஸ்ருதி இந்தியில் அறிமுகமானாலும் தமிழில் அவர் நடித்த ஏழாம் அறிவு தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியில் இருந்த ஸ்ருதிக்கு தற்போது கூடுதல் இல்லை பன்மடங்கு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ஒய் தி்ஸ் கொலவெறி, கொலவெறிடி.

 உலகமெல்லாம் முணுமுணுக்கும் பாடல் கொலவெறிடி. இந்த பாடல் மூலம் தனுஷும், ஸ்ருதியும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர். சரி ஸ்ருதியை கமல் எதற்காக அழ வைத்தார் என்ற மேட்டருக்கு வருவோம். 

கமல்ஹாசன் நடித்த மகாநதி, குணா ஆகிய படங்களை ஸ்ருதி 20 தடவைக்கும் மேல் பார்ததுள்ளாராம். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் தனது தந்தையின் சோகமான நடிப்பைப் பார்த்து அழ ஆரம்பித்துவிடுவாராம். அடடா என் அப்பா எவ்வளவு தத்ரூபமாக நடித்துள்ளார். அவரது சோகமான நடிப்பைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் கண்கள் கலங்கி கண்ணீர் வடிகிறதே என்று ஸ்ருதி தன் தந்தையைப் பற்றி பெருமைப்படுகிறார்.

ரஜினி குடும்பத்துக்கு கண்டனம்! - கருணாஸ்!

பல லட்சம் ரூபாய் செலவழித்து செய்யப்பட்ட பிரமாண்ட பிறந்த நாள் விழாவில் ரஜினி குடும்பத்திலிருந்து யாரும் பங்கேற்காதது வருத்தத்தைத் தருவதாகவும், ஒரு ரசிகனாக இதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் நடிகர் கருணாஸ் தெரிவித்தார். இதனால் விழா மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

லட்சணக்கான ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ரஜினியின் பிறந்த நாள் விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு ரஜினி வராவிட்டாலும் ரஜினியின் குடும்பத்திலிருந்து யாராவது நிச்சயம் வருவார்கள் என்று தலைமை ரசிகர் மன்றம் உறுதி அளித்திருந்ததால் மும்பை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர். வந்த அனைவரும் ஏழை மக்களுக்கு வழங்க பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிப் பொருள்களையும் எடுத்துவந்திருந்தனர்.

ரஜினி குடும்பத்தினர் முன்னிலையில் இந்தப் பொருள்களை வழங்க ஆசைப்பட்டனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் சற்று ஏமாற்றத்துக்குள்ளாகினர் ரசிகர்கள். அவர்களின் மனதைப் பிரதிபலிக்கும் வகையில் நடிகர் கருணாஸ், பகிரங்கமாக ரஜினி குடும்பத்துக்கு கண்டனம் தெரிவித்தார். "இவ்வளவு பிரமாண்டமாக எந்த நடிகனுக்காவது விழா நடக்குமா.. ஆனால் என் தலைவனுக்கு மட்டுமாதான் நடக்கிறது. காரணம் ரசிகர்கள் அவர்மீது வைத்திருக்கும் அன்பு. இந்த விழாவுக்கு தலைவர் ரஜினி வராததில் தவறில்லை. காரணம் அவர் வந்தால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்திருக்காது. ஆனால் அவர் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் வந்திருக்க வேண்டுமல்லவா... இவ்வளவு பேரும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் எத்தனையோ நிகழ்ச்சிக்குப் போகும் ரஜினி குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு வராததை நான் வெளிப்படையாகவே கண்டிக்கிறேன். நானும் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அவரைத் தலைவராக ஏற்றவன் என்ற உரிமையுடன் இதனை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

Saturday 17 December 2011

செங்கடல் படத்தை திரையிடு திரைப்பட விழாவில் பரபரப்பு

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டு கொல்லும் அவலத்தையும் , Sengadalஇலங்கை முள் வேலிக்குள் சிக்கி தவிக்கும் அப்பாவி மக்களை படும் கொடுமைகளை பற்றி எடுக்கப்பட்ட படம் லீணா மணிமேகலை இயக்கிய‌ செங்கடல் திரைப்படம். பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு பிறகு செங்கடல் படத்திற்கு சென்சார் அனுமதி கிடைத்தது.

செங்க்டல் திரைப்படம் டோக்கியோ, டர்பன்,மொன்றியல், மும்பை, டொரண்டோ, கேன்ஸ் மற்றும் இந்தியன் பனோரமா சார்பாக கோவா பட விழாவிலும் திரையிடப்பட்டது. சென்னை திரைப்படவிழாவில் பல தமிழ் படங்கள் திரையிடப்படுகிறது ஆனால செங்க்டல் திரையிடப்படவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திரைப்படவிழா துவக்கம் நடந்துகொண்டிருந்த போது திடீரென இருக்கைகளிலிருந்து எழுந்து இயக்குனர் லீணா மணிமேகலை, எடிட்டர் லெனின், இயக்குனர் மாமல்லன் கார்த்திக், வெளி ரங்கராஜன் ஆகியோர் கையில் பலகைகள் உடன் திரையிடு திரையிடு செங்கடல் படத்தை திரையிடு என முழக்கம் எழுப்ப ஆரம்பித்தனர்.

இதனால் திரைப்படவிழாவின் துவக்கத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு சரத்குமார் போராட்டக்காரர்களுடன் பேசி பிரச்சனையை அப்போதைக்கு முடித்து வைத்தார்.

செங்கடல் திரையிடப்படுமா....?

-சென்னை திரைப்பட விழாவிலிருந்து சாஃப்ட்வியூ விசுவல் கம்யூனிகேசன் மாணவர்களுடன் தாஸ்..,

பார்வையாளர்களை கவரும் பிரான்ஸ் நாட்டு படங்கள்

சென்னை திரைப்படவிழாவில் பலநாடுகளை சார்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டுChennai International Film Festivalவருகிறது. உலக சினிமாக்களில் ஈரான் நாட்டு படங்களுக்கு எப்போதும் ஒரு ரசிகர் வட்டாரம் இருந்து கொண்டே இருக்கும். அந்நாட்டின் கலாச்சாரத்தை சரியாக பிரதிபலிப்பது என்பதும் சில முக்கிய இயக்குனர்கள் உலக அளவில் பிரபலமானவர்கள் என்பதும் ஒரு காரணம் ஆகும். ஈரானிய சினிமாக்களுக்கு கடுமையான சென்சாருக்கு பிறகே திரைப்பட விழாவுக்கு அனுப்பப்படுகிறது.
பிரான்ஸ் படங்களுக்கு சென்சார் காட்சிகள் தடை என்ற பிரச்சனை எல்லாம் எதுவும்இல்லாததால் படுக்கை அறை காட்சிகளுக்கு பஞ்சம் வைப்பது இல்லை. முத்த காட்சிகளும் சாதாரணமாக பிரான்ஸ் படங்களில் இடம்பெருகிறது. இது தான் காரணமோ இது போன்ற படங்கள் அதிகமாக தேர்வு செய்து பார்க்கப்படுகிறது என  யோசிக்க வைக்கிறது.
ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு பீலிங்ஸ் என்பதை போல.பிரான்ஸ் நாட்டு படங்களை தேர்வு செய்வோருக்கு ஒரு பீலிங்ஸ்….!

கலக்கும் பவர் ஸ்டார் கதிகலக்கும் ரசிகர்கள்…

ஒரே தியேட்டரில் ஒரே படத்தை ஓட்டி ஓட்டி ரொம்ப பிரபலமாகிவிட்டார் பவர் powerstar srinivasanஸ்டார், சமூக வலைத்தளங்களில் இவரை வைத்து தான் பலர் பொழுதுபோக்கி வருகிறார்கள். அந்த அளவுக்கு புகழின் உட்சத்தை அடைந்து வருகிறார் என்பது உண்மையா இல்லையா என்பதை சிபிஐ வைத்து தான் கண்டுபிடிக்கணும்..
சென்னை திரைப்பட விழாவில் பவர்ஸ்டாரை பார்த்த பலர் சூப்பர் ஸ்டாரை பார்த்தது போல ( தலைவா மன்னிச்சுடுங்க உங்ககூட ஒப்பிட்டு விட்டேன் ) பரபரப்பாகி வருகிறார்கள். பவர்ஸ்டாருடன் நின்று போட்டோ எடுக்க கூட்டம் அலை மோதுகிறது. பல சமயங்களில் பவர்ஸ்டாரை காப்பாத்த பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள் .
சில ரசிகர்கள் நாளைய முதல்வரே என்றெல்லாம் கத்த ஆரம்பித்தனர். இதெல்லாம் அவருக்கான உண்மையான ரசிகர்கள் என்று நம்புகிறார் போல, ஃபேஸ்புக் பார்த்தா தான் தெரியும் பவர் ஸ்டார் காமெடி பீசா டெரர் பீசா என்று…
உங்களை வச்சு கண்டிப்பாக யாரும் காமெடி பண்ணல பவர்ஸ்டார்…!!!!
- சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலிருந்து சாஃப்ட்வியூ விசுவல் கம்யூனிகேசன் மாணவர்களுடன் தாஸ்..,

Friday 16 December 2011

வடிவேலு மீது கொலை கேஸ் மேனேஜர் சாவில் மர்மம்


எக்கச்சக்க சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. நில மோசடி, அல்லது நிலத்தை வாங்கி ஏமாந்த விவகாரம் என்று மிக சாதாரணமாகதான் இருந்தது அவரதுvadiveluபோலீஸ் ஸ்டேஷன் போக்குவரத்து. திடீரென்று கொலை, சாவு, ஒப்பாரி என்று இதே போலீஸ் ஸ்டேஷன் போக்குவரத்து வேறு திசையில் திருப்பிவிடப் பட்டிருப்பதால் அவரும் அவருக்கு நெருக்கமானவ்ர்களும் இப்போது பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
வடிவேலுவின் மேனேஜராக இருந்த வேலுச்சாமி திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அப்போதே இந்த சாவில் மர்மம் இருப்பதாக கிசுகிசுத்தார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால் பல வருடங்கள் கழித்து இந்த பிரச்சனையை கொலை என கூறி அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறார் வேலுச்சாமியின் மனைவி பாண்டீஸ்வரி.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பாண்டீஸ்வரி கூறியிருப்பதாவது-
'நடிகர் வடிவேலுவிடம் எனது கணவர் வேலுச்சாமி மேனேஜராக வேலை பார்த்தார். கடந்த 4.2.2009-ல் வேலுச்சாமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வடிவேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வடபழனி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது கணவரை வடிவேலு கொலை செய்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்.
கடந்த ஆட்சியில் தி.மு.க. தலைவர்களிடம் வடிவேலு நெருக்கமாக இருந்தார். இதனால் அவருக்கு எதிராக என்னால் புகார் கொடுக்க முடியவில்லை. 19.8.2011-ல் எனது கணவர் சாவு குறித்து சந்தேகம் எழுப்பி போலீஸ் டி.ஜி. பி.யிடம் புகார் மனு அளித்தேன். அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு இரு மகன்கள் உள்ளனர். எங்களுக்கு மிரட்டல்கள் வருகிறது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது கணவர் சாவு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாண்டீஸ்வரி சார்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜராகி வாதாடும் போது நடிகர் ராஜ்கிரணிடம் வடிவேலுவை அறிமுகம் செய்து வைத்தது வேலுச்சாமிதான். முதலில் வேலுச்சாமி ராஜ்கிரணிடம் கணக்கு பிள்ளையாக இருந்தார். பிறகு வடிவேலுக்கு மானேஜரானார்.
நில மோசடி பிரச்சினை எழுந்த போது வேலுச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதில் சந்தேகம் எழுகிறது. இந்த சாவு குறித்து பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். இது வரை கோர்ட்டுக்கு அனுப்பப்படவில்லை என்றார். இதையடுத்து பாண்டீஸ்வரி புகார் மனு குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி போலீஸ் டி.ஜி.பிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

நமீதாவின் சிக்கன் ஆசை மூணு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி


சில காலம் ஆகிவிட்டது நமீதாவை பார்த்து. தெலுங்கு, போஜ்பூரி, கன்னடம் என்று வேற்று மொழி ஏரியாவில் வெயிட் காட்டிக் கொண்டிருக்கிறாராம். அதனால்தான் இந்தnamithaஆப்சென்ட். ஆனால் சில தினங்களுக்கு முன் நடந்த கொள்ளைக்காரன் ஆடியோ விழாவில் அதிசயமாக பார்க்க முடிந்தது அவரை. அதே வெயிட், அங்குலம் கூட ஏறாத சதைப்பற்று என்று நமீதாவின் கட்டுமஸ்தான கவர்ச்சி எப்போதும் போலவே வெளிப்பட்டது.
‘தெய்வமே வரம் கொடு’ என்பதை போல ரசிகர்கள் அவரை விரட்டி விரட்டி ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தார்கள். நமீதாவை பார்த்ததும்தான் நமக்கும் அந்த ரெஸ்ட்ராரெண்ட் நினைவு வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் நம்பை அழைத்த சப்-வே என்ற ரெஸ்ட்ராரெண்ட்டின் முதலாளி விபின் சத்சேவ் ‘நமீதா மேடம் நம்ம ரெஸ்ட்ரெண்ட் டிஷ் என்றால் இன்னும் ரெண்டு பீஸ் சேர்த்து சாப்பிடுவாங்க. அதுக்கு காரணம் ருசி மட்டுமல்ல, இங்கு கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சியைதான் கொடுக்கிறோம்’ என்றார். இதே ரெஸ்ட்ராரெண்ட்டில் ஏகப்பட்ட நமீதாக்கள் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிந்தது. வாயை கட்டவும் முடியாமல், கொழுப்பை சகிக்கவும் முடியாமல் தவிக்கும் அநேக அழகிகளுக்கு சொர்க்கமாக திகழ்வது இந்த சப்-வேதான் என்பதை சொல்லாமல் சொல்லியது அந்த கலக்கல் ஏரியா.
அவ்வப்போது இவர்களுக்கு போன் அடித்து, சிக்கன் ஐட்டங்களை வரவழைத்து உள்ளே தள்ளும் நமீதா, எல்லா பேட்டிகளிலும் தவறாமல் குறிப்பிடுவது தனக்கு சிக்கன் ரொம்ப பிடிககும் என்பதைதான்.
அடடே, ஒரு சிக்கனே சிக்கனை சாப்பிடுகிறதே. (மூணு புள்ளி, ஒரு ஆச்சர்யக்குறியை சேர்த்து படிக்கவும்)

வெற்றிமாறனை அதிர வைத்த தலைப்பு சமாச்சாரம்


பொன்னை வைத்த இடத்தில் புண்ணாக்கை வைத்த மாதிரி என்னப்பா சோதனை இதுvetrimaranஎன்று அலறுகிறார்கள் வெற்றிமாறன் ஆபிசில். கிணற்று வெள்ளத்தை ஆற்று வெள்ளமா அடித்துக் கொண்டு போகும் என்ற சொலவாடையை சூர்ப்பனகை மூக்கறுத்த மாதிரி அறுத்து தள்ளிவிட்டார் பவர் ஸ்டார்.
விஷயம் இதுதான். பொல்லாதவன் படத்தை எடுப்பதற்கு முன்பே வெற்றிமாறன் மனதில் இருந்த கதையும் அதற்கான தலைப்பும் தேசிய நெடுஞ்சாலை என்பதுதான். ஆனால் முதலில் பொல்லாதவன் எடுப்போம். அப்புறம் பார்க்கலாம் தேசிய நெடுஞ்சாலையை என்று கூறிவிட்டார் தயாரிப்பாளர்.
ஆனால் தன் முதல் கதையை எப்படியாவது படமாக்கிவிட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் யோசிக்கும் வெற்றிமாறன், தற்போது இயக்கி வரும் வடசென்னை முடிந்ததும் தேசிய நெடுஞ்சாலைதான் என்று முடிவே செய்திருந்தாராம். இந்த நேரத்தில்தான் 'பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் தேசிய நெடுஞ்சாலை' என்று நாளிதழ்களில் விளம்பரம் வந்து வெற்றி மாறனை வெறி கொள்ள வைத்துவிட்டது.
என்னாச்சு என்று விசாரித்தால், மேற்படி தலைப்பை ரினீவல் செய்யாமல் விட்டு விட்டார்களாம் வெற்றி மாறன் தரப்பில். இதற்காகவே காத்திருந்த சீனிவாசன் டைட்டிலை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டாராம்.
ஒருமுறை பவர் ஸ்டார் படம் போட்டு விளம்பரம் வந்தபின் அந்த தலைப்பை பற்றி இனிமேல் கனவில் கூட யோசிக்க வேண்டாம். எல்லாம் எண்ணெய் தேய்ச்சு குளிங்கப்பா என்று குமைந்துவிட்டாராம் வெற்றிமாறனும்.

நாமதான் வளர்த்துவிடணும்... நடிகர் பிரபு ரெகமன்டேஷன்


ஆந்திரா ஸ்டார் மோகன்பாபுவுக்கும் அந்தகால சென்னைக்கும் அநியாய நெருக்கம்Mohan Babu - Manoj உண்டு. இவரும் ரஜினியும் பிலிம் இன்ஸ்டியூட்டில் ஒன்றாக படித்தவர்கள் மட்டுமல்ல, ஒன்றாகவே இணைந்து ஊர் வம்பை இழுத்தவர்களும் கூட. இந்த பசுமைகால வாழ்வை அப்படியே நினைவில் வைத்திருக்கும் மோகன்பாபு இப்பவும் ரஜினியை மீடியா முன்பு அவன் இவன் என்று சொல்வதே அலாதி அழகுதான்.
தனது வாரிசை எப்படியாவது தமிழ் படங்களில் வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்ற மாறாத ஆசையும் இருக்கிறது மோகன்பாவுக்கு. என்னை தெரியுமா என்று ஏற்கனவே ஒரு படத்தை இங்கு ரிலீஸ் செய்தார் அவர். அது மோகன்பாபுவுக்கும் சரி, அவரது மகன் மனோஜுக்கும் சரி, கொழுத்த லாபத்தை கொடுக்கவில்லை எந்த வகையிலும். இந்த நிலையில்தான் மீண்டும் முயல்கிறார் மனோஜ். இந்த முறை இந்த முயற்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பது மோகன்பாபுவின் மகள் லட்சுமி. இவர் தயாரிக்கும் புதிய படத்தில் தம்பியை ஹீரோவாக்கிவிட்டார். இது தமிழ் தெலுங்கில் எடுக்கப்படும் படம் என்று சாதித்தார்கள் இருவரும்.
படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபு ஒரு விஷயத்தை சொன்னார் இப்படMohan Babu - Manoj பூஜையில். நடிகர் திலகம் சிவாஜிதான் மோகன்பாபுவை முதலில் தமிழில் நடிக்க வைத்தாராம். இவர் நடித்த அண்ணன் ஒரு கோவில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் மோகன். ''நான் சின்ன புள்ளையா இருக்கிற காலத்திலிருந்தே ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல அன்பும் நெருக்கமும் உண்டு. வந்தாரை வாழ வைக்கும் பண்பு நம்ம எல்லாருக்கும் இருக்கு. அதனால் ஆந்திராவில் செட்டில் ஆகிட்டாலும் தமிழ்நாட்டிலேயே வளர்ந்து இங்கேயே படிச்ச மனோஜுக்கும் இந்த படத்திற்கும் நீங்கதான் சப்போர்ட் பண்ணணும்'' என்று கேட்டுக் கொண்டார் பிரபு.
இப்படத்தில் மனோஜுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் தீக்ஷாசேத். ராஜபாட்டை வந்து வெற்றி பெற்றால் மனோஜ் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ஒரு அட்ராக்ஷன் கிடைக்கலாம்.

ஒஸ்தி ரிசல்ட்? சிம்புவிடம் கறார் காட்டும் தயாரிப்பாளர்


ஒஸ்தி ஃபீவரிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுவிட்டார் சிம்பு. ஆனால் அவரைosthiவைத்து படம் எடுக்கும் அடுத்தப்பட தயாரிப்பாளர்கள் மீண்டார்களா என்றால் அதுதான் இல்லை. இவரை வைத்து வேட்டை மன்னன் படத்தை தயாரித்து வரும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டுவிட்டாராம் இப்போது.
ஒஸ்தி ரிலீஸ் நேரத்தில் தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எல்லாரும் முந்தைய கடன் பாக்கிக்காக டி.ஆரை நெருக்கியதை கண் கூடாக கவனித்த சக்கரவர்த்தி, முதல் ஷெட்யூல் படப்பிடிப்புக்கு பிறகு ரெண்டாவது ஷெட்யூல் பற்றி யோசிக்கணும் என்றாராம் சிம்புவிடம். இதுவரைக்கும் இவ்வளவு செலவு பண்ணியிருக்கேன். இந்த படத்திற்கு இன்னும் செலவு செய்து முடிக்கும்போது முந்தைய கடன் பாக்கியை கொடுத்தால்தான் படத்தை ரிலீஸ் பண்ண விடுவேன்னு பிரச்சனை பண்ணினால் என்னால் முடியாது. இப்பவே எல்லா தியேட்டர்காரர்களையும், விநியோகஸ்தர்களையும் அழைத்து பேசி சரியாக வந்தால்தான் அடுத்த ஷெட்யூல் என்று கூறிவிட்டாராம்.
அதுமட்டுமல்ல, சிம்புவை இயக்கிக் கொண்டிருக்கும் வேட்டை மன்னன் இயக்குனர் நெல்சனிடம் இன்னும் எத்தனை நாட்கள் ஷுட்டிங் நடக்கும்? சிம்பு ஒரு நாள் கூட டேட்ஸ் வேஸ்ட் பண்ணாமல் வருவாரா என்றெல்லாம் நச்சரித்துவிட்டாராம்.
புத்துக்குள் கைய விடுறதா முடிவு பண்ணிட்டாரு. க்ளவுஸ் போட்டுக்கறது தப்பில்லையே?

பிரபாகரன் வேடத்தில் சத்யராஜ் பரபரப்பாக உருவாகும் சினிமா


Sathya rajபெரும்பாலான ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும்போதெல்லாம், சாகுறதுக்குள்ளே ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சுடணும். அதுதான் என் ஆசை என்றெல்லாம் அளப்பார்கள். ஆனால் யாராவது அந்த குறிப்பிட்ட கேரக்டரோடு வந்தால், '...ந்தா. சுவிட்சர்லாந்துல டீ குடிச்சுட்டு வந்துடறேன்' என்று எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
அப்படி எல்லாரையும் ஒரே நேரத்தில் கவர்ந்து, ஒரே நேரத்தில் அலறவும் வைக்கிற கேரக்டர் மாவீரன் பிரபாகரன் வேடம்தான். ஆனால் எவ்வித பதற்றமோ, பயமோ இல்லாமல் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார் சத்யராஜ். நடிகர் நந்தா தற்போது விடுதலைப்புலி திலீபனின் வரலாற்றை படமாக்கிக் கொண்டிருக்கிறார். இடையில் நிறுத்தப்பட்டிருந்த இப்படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டு விட்டது.
இதில்தான் நடிக்க அழைக்கப்பட்டிருக்கிறார் சத்யராஜ். திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது அவரை நேரில் சந்தித்தாரல்லவா பிரபாகரன்? அந்த ஒரு நிமிட காட்சியில்தான் நடிக்கப்போகிறார் சத்யராஜ்.

ஒப்புக் கொண்டார் விஜய் பறித்துக் கொண்டார் சூர்யா... -அதிரடியான முயல்-ஆமை ஓட்டம்


ஒவ்வொரு கட்டத்திலும் விஜய்யை வெற்றி கொள்வதையே தனது லட்சியமாக வைத்திருக்கிறார் சூர்யா. கண்ணுக்கு தெரியாத இந்த காட்டுத்தனமான போட்டி, முயல்- ஆமை ஓட்டம் போல செம சுவாரஸ்யம்.
'மாற்றான்' பட சம்பளத்துடன் சேர்த்து தெலுங்கு உரிமையையும் வாங்கிக் கொண்டிருக்கும் சூர்யா, தனது கணக்குப்படி பார்த்தால் கூட பதினெட்டு கோடி ரூபாய் சம்பளத்தை 'கிராஸ்' செய்துவிட்டார். Surya - Vijayஇந்த சம்பளத்தை இன்னும் விஜய்யே தொடவில்லை என்பதுதான் வேதனை.
ஒவ்வொரு முறையும் முதலில் விஜய்யிடம் சொல்லப்பட்ட சில கதைகளில் நடித்துதான் இத்தனை பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார் சூர்யா. இவரது லேட்டஸ்ட் கபளீகரம் முன்னணி சேனல் ஒன்றில் வெளிவரப்போகும் கேம் ஷோ.
முதலில் இந்த நிகழ்ச்சியை விஜய் நடத்துவதாகதான் இருந்தது. நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் சம்பளமும் பேசப்பட்டதாம். ஆனால் இடையில் என்ன நடந்து யார் குழப்பிவிட்டார்களோ தெரியாது. விஜய்க்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் சூர்யா. மாற்றான் படப்பிடிப்புக்காக இத்தாலி போயிருந்தவர், சென்னை திரும்பிவிட்டார். பெரிய செட் போட்டு படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார்கள். அநேகமாக பொங்கலில் இருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்படலாம்.

Wednesday 14 December 2011

திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்: நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு


நடிகை தமன்னாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. கடைசியாக வேங்கை என்ற படத்தில் நடித்தார். தற்போது 5 தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன. ராம்சரண் ஜோடியாக நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்து வருகிறது. நேற்று படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னாவும் ராம்சரண் தேஜாவும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வி.ஐ.பி. வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
தமன்னா ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்து இருந்தார். ஜீன்ஸ் அணிந்த பெண்களை கோவில் நிர்வாகத்தினர் சாமி கும்பிட அனுமதிப்பதில்லை. ஆனால் தமன்னா சுதந்திரமாக வந்து தரிசனம் செய்தது சக பெண் பக்தர்களை எரிச்சல்பட வைத்தது. அவர்கள் கோவில் நிர்வாகத்தினரை கண்டித்தனர். இதற்கிடையில் அவசரமாக தரிசனத்தை முடித்து விட்ட தமன்னா புறப்பட்டுச் சென்று விட்டார்.
ராம்சரண் வெளியே வந்தபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவரை பார்க்க ஒவ்வொரு வரும் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ராம்சரண் நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, எனது திருமணம் ஜனவரியில் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. திருமண வரவேற்பை திருப்பதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
                                                               123tamilcinema.com        

யானைகளிடம் இருந்து கார்த்தி, அனுஷ்கா உயிர் தப்பினர்


கார்த்தியும் அனுஷ்காவும் புதுப்படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். சுராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு மாதமாக நடந்தது. அங்கு பங்களா வீடு போன்ற அரங்கு அமைத்து காட்சிகளை எடுத்தனர்.
பின்னர் யானைகள் நடமாடும் ஆபத்தான பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்தது. உள்ளூர் பகுதி மக்கள் அங்கு யானைகள் கூட்டம் கூட்டமாய் வரும் என்றும் எப்போதும் வரும் என்பதை சொல்ல முடியாது என்றும் எச்சரித்தனர். ஆனால் லொக்கேஷன் அற்புதமாக இருந்ததால் படப்பிடிப்பை நிறுத்த மனமின்றி கார்த்தி, அனுஷ்கா நடித்த சில காட்சிகளை எடுத்தனர்.
படப்பிடிப்பை முடித்து விட்டு இருவரும் புறப்பட்டுச் சென்றதும் திடீரென அந்த பகுதியில் யானைக்கூட்டம் வந்தன. கார்த்தியும் அனுஷ்காவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதுபற்றி கார்த்தி கூறும் போது, சாலக்குடி காட்டில் யானைகள் அடிக்கடி வந்து போகும் இடத்தில் படப்பிடிப்பு நடந்தது.
சூட்டிங் முடிந்து நாங்கள் புறப்பட்டு போனதும் அங்கு யானை கூட்டம் வந்து இருப்பதாக தகவல் சொன்னார்கள். அதிர்ஷ்டவசமாக தப்பினோம். ஏற்கனவே “ஆயிரத்தில் ஒருவன்” படப்பிடிப்புக்காக சாலக்குடி காட்டுக்கு போய் உள்ளேன். அழகான இடம் என்றார்.
                                                      123tamilcinema.com

25 லட்ச ரூபாய் ! : திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு


9வது சென்னை உலக திரைப்பட விழா டிசம்பர் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்த ஆண்டு சுமார் 154 படங்களை திரையிட இருக்கிறார்கள்.
154 படங்களில் 133 படங்கள் 44 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. இம்முறை உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, சத்யம், ஐநாக்ஸ், பிலிம் சேம்பர் என சென்னையில் ஐந்து திரையரங்குகளில் திரையிட இருக்கிறார்கள். 14ம் தேதி இவ்விழாவை சேகர் கபூர் துவக்கி வைக்க இருக்கிறார்.
தமிழில் இருந்து 12 படங்கள் இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. ‘அவன் இவன்’, ‘ஆடுகளம்’, ‘மைதானம்’, ‘முரண்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘வாகை சூட வா’, ‘வர்ணம்’, ‘வெங்காயம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தூங்காநகரம்’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘கோ’ஆகிய படங்கள் இம்முறை திரையிட தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
சென்னையில் நடைபெற உள்ள இந்த திரைப்பட விழாவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதனால் CIFF குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதுகுறித்து சுஹாசினி ” சென்னையில் நடைபெற உள்ள திரைப்பட விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதா 25 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். அதற்காக எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
சரத்குமார், நான், தங்கராஜ் சார், ஜெயேந்திரா சார் ஆகியோர் இணைந்து தமிழக முதல்வரை சந்திக்க சென்றோம். திரைப்பட விழா குறித்து அனைத்து தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்.
கண்டிப்பாக அடுத்த ஆண்டு 10வது திரைப்பட விழா பிரம்மாண்டமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தமிழ் திரைப்படங்களை தேர்ந்தெடுத்தது குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது. இந்நேரத்தில் அதை தெளிவுபடுத்த கடமைப்பட்டு இருக்கிறேன். அக்டோபர் 24, 2010 முதல் அக்டோபர் 23, 2011 வரை வெளிவந்த படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. படத்தின் தயாரிப்பாளர்கள் ENGLISH SUB TITLES போட்டு படத்தினை எங்களுக்கு அனுப்ப வேண்டும். எங்களுக்கு வந்த படங்களில் இருந்து மட்டுமே தேர்வு செய்து இருக்கிறோம். ” என்று தெரிவித்தார்.
                                                            
இம்முறை CIFF புதிதாக நிறைய வசதிகளை செய்துள்ளது. இத்திரைப்பட விழாவைக் காண சினிமா ஆர்வலர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
                                            123tamilcinema.com

முகமூடி உருவான கதை!


முகமுடி கதையைக் கேட்க எனது அலுவலகத்துக்கு வரமுடியுமா என்று ஜீவாவிடம் கேட்ட பத்து நிமிடத்தில் என் முன்னாள் நின்றார். அதேபோல ஆறுமாதம் குங்பூ பயிற்சி எடுக்க வேண்டும் முடியுமா என்றேன், அவரோ ஆறு வருடமாக குங்பூ பயிற்சியில இருக்கேன் என்றார். இந்தத் தகுதியை பல ஹிரோக்களிடம் எதிர்பார்த்து அவர்களிடம் இல்லாமல் போய் விட்டது என்று நேற்று சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நடந்த முகமுடி தொடக்க விழாவில் குறிப்பிட்டார் இயக்குனர் மிஷ்கின்.
இந்தக் கதையும், இந்தப் படத்தின் டைட்டிலும் உருவாகக் காரணம், சிறுவயத்தில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள்தான். அவைதான் என்னுள் சினிமா இயக்கவேண்டும் என்ற கனவை விதைத்தவை என்று சொன்ன மிஷ்கினுக்கு இது மிஷ்கினின் கனவுப் படம் என்கிறார்கள்.
ஜீவா – மிஸ் யுனிவர்ஸ் பைனலிஸ்ட் பூஜை ஹெக்டே ஜோடியாக நடிக்க பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போல ஒரு உண்மையான முதல் சூப்பர் ஹீரோ படமாக உருவாகிறது என்கிறார் படத்தை தயாரிக்கும் யூடிவின் தென்னிந்திய நிர்வாகி தனஞ்செயன்.
தொடக்க விழா அன்றே படப்பிடிப்பை தொடங்கிய மிஷ்கின், முதல் கட்ட படபிடிப்பில் பிரமாண்ட குங்பூ போட்டியை படமாக்கிக் கொண்டிருந்தார். ஏராளமான துணை நடிகர்கள் குங்பூ சீருடையில் கலந்து கொண்டனர். ஷங்கர் முருகதாஸ் போல ஹாலிவுட்டில் ஆள் பிடிக்காமல் ஆக்‌ஷன் காட்சிகளுகான குங்பூ சண்டைகளை வடிவமைக்க சென்னையை சேர்ந்த குங்பூ மாஸ்டர் சேகரையும் (இவரிடம் மிஷ்கினும் குங்பூ கற்றுக்கொண்டாராம்) திலிப் சுப்ராயணையும் ஆக்‌ஷன் டைரக்டர்களாக நியமித்துள்ளார்.
நரேன் வில்லனாகவும் நாசர் போலீஸ் அதிகாரியாகவும் முன்னாள் ஹீரோ செல்வா, ஜீவாவின் குங்பூ மாஸ்டராகவும் நடிக்கிறார்கள். இந்தப்படம் ஆடுத்த ஆண்டு மே மாதம் வெளியாக இருக்கிறது.
                                                   123tamilcinema.com

முகமூடி உருவான கதை!


முகமுடி கதையைக் கேட்க எனது அலுவலகத்துக்கு வரமுடியுமா என்று ஜீவாவிடம் கேட்ட பத்து நிமிடத்தில் என் முன்னாள் நின்றார். அதேபோல ஆறுமாதம் குங்பூ பயிற்சி எடுக்க வேண்டும் முடியுமா என்றேன், அவரோ ஆறு வருடமாக குங்பூ பயிற்சியில இருக்கேன் என்றார். இந்தத் தகுதியை பல ஹிரோக்களிடம் எதிர்பார்த்து அவர்களிடம் இல்லாமல் போய் விட்டது என்று நேற்று சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நடந்த முகமுடி தொடக்க விழாவில் குறிப்பிட்டார் இயக்குனர் மிஷ்கின்.
இந்தக் கதையும், இந்தப் படத்தின் டைட்டிலும் உருவாகக் காரணம், சிறுவயத்தில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள்தான். அவைதான் என்னுள் சினிமா இயக்கவேண்டும் என்ற கனவை விதைத்தவை என்று சொன்ன மிஷ்கினுக்கு இது மிஷ்கினின் கனவுப் படம் என்கிறார்கள்.
ஜீவா – மிஸ் யுனிவர்ஸ் பைனலிஸ்ட் பூஜை ஹெக்டே ஜோடியாக நடிக்க பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போல ஒரு உண்மையான முதல் சூப்பர் ஹீரோ படமாக உருவாகிறது என்கிறார் படத்தை தயாரிக்கும் யூடிவின் தென்னிந்திய நிர்வாகி தனஞ்செயன்.
தொடக்க விழா அன்றே படப்பிடிப்பை தொடங்கிய மிஷ்கின், முதல் கட்ட படபிடிப்பில் பிரமாண்ட குங்பூ போட்டியை படமாக்கிக் கொண்டிருந்தார். ஏராளமான துணை நடிகர்கள் குங்பூ சீருடையில் கலந்து கொண்டனர். ஷங்கர் முருகதாஸ் போல ஹாலிவுட்டில் ஆள் பிடிக்காமல் ஆக்‌ஷன் காட்சிகளுகான குங்பூ சண்டைகளை வடிவமைக்க சென்னையை சேர்ந்த குங்பூ மாஸ்டர் சேகரையும் (இவரிடம் மிஷ்கினும் குங்பூ கற்றுக்கொண்டாராம்) திலிப் சுப்ராயணையும் ஆக்‌ஷன் டைரக்டர்களாக நியமித்துள்ளார்.
நரேன் வில்லனாகவும் நாசர் போலீஸ் அதிகாரியாகவும் முன்னாள் ஹீரோ செல்வா, ஜீவாவின் குங்பூ மாஸ்டராகவும் நடிக்கிறார்கள். இந்தப்படம் ஆடுத்த ஆண்டு மே மாதம் வெளியாக இருக்கிறது.
                                                   123tamilcinema.com

Tuesday 13 December 2011

சிலுக்கை கடித்த கொசுக்களும், கோடம்பாக்கத்தில் மிரட்டலும்...


சிலுக்கை கடித்த கொசு கோடம்பாக்கத்தை விட்டு நகராதல்லவா? அப்படிதான் ஆகிவிட்டது இந்து மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியின் நிலைமை.asinகோடம்பாக்கத்தையும் வடபழனியையும் சுற்றி சுற்றியே கட்சி நடத்தி கதையை ஓட்டி விடுவார்கள் போலிருக்கிறது. சினிமாவுக்குள் எது நடந்தாலும் முதலில் வேர்ப்பது இவர்கள் மூக்குதான். இதே பிரச்சனை வேறொரு அரசியல்வாதி ஏரியாவில் நடந்தால் இவர்கள் மூச் காட்டமாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்ததை கூட வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். (சென்னையே புழுதி மயமாகிக் கிடக்கிறது. சாலைகள் அத்தனையும் வேஸ்ட் என்கிற நிலைமை. ஒரு முறையாவது அறிக்கை கொடுத்திருப்பார்களா இவர்கள்?)
சினிமாவை தொட்டால்தான் விளம்பரம் என்பதை மிக சரியாக புரிந்து வைத்திருக்கும் இவர்கள் இந்த முறை வேர்த்திருப்பது எதனால்? கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அசின் நடிக்கப் போகிறார் என்றொரு பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. அசின் இலங்கைக்கு சென்று வந்தவர். அதனால் அவரை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் ரஜினி வீட்டுக்கு முன்பு போராட்டம் நடத்துவோம் என்று உடனே ஆஜர் கொடுத்துவிட்டார்கள் இவர்கள்.
தொல்.திருமாவளவன் சினிமாவில் நடிக்க வந்தபோது, இனிமே எங்க தலைவர்தான் நடிகர் சங்கத்திற்கும் தலைவர் என்று அவருக்கே தெரியாமல் கொக்கரித்தார்கள் அவரது அடிப்பொடிகள். அதெல்லாம் எப்படி நடக்காமல் போனதோ, அப்படிதான் அமையும் இதுபோன்ற மின்மினிப்பூச்சி ஐடியாக்கள் எல்லாம்.
புரிந்து கொள்ளுங்கள் பிரதர்ஸ்... 

ஒரே ஒரு குத்துப்பாட்டு ஆட வந்த அரசியல் ரோஜா


ஒரு பாடலுக்கு ஆடுவது சினிமாவை பொறுத்தவரை ரிலாக்ஸ் ஏரியா.rojaஆடுகிறவர்களுக்கும் சரி, அதை ரசிக்கிறவர்களுக்கும் சரி, பொரிக்கடலையை கொறித்த மாதிரி பொழுதுபோக்கிலும் ஒரு பொழுதுபோக்காக அமைகிற விஷயம் அது. தமிழ்சினிமாவில் ஒற்றை பாடல் என்றால் அந்த காலத்தில் ஜெயமாலினியில் ஆரம்பித்து லேட்டஸ்ட் சுஜா வரைக்கும் திரும்ப திரும்ப ஒருவரே ஆடி, ஒருவரே சுளுக்கிக் கொள்கிற அளவுக்கு போரடிக்கிற சமாச்சாரம் ஆகிவிட்டது.
இதையெல்லாம் முறியடிக்கிற மாதிரி ஆன்ட்டிகளை இறக்கிவிட்டு அதகளம் கிளப்பினார்கள் நடன இயக்குனர்களான தினேஷும், பாபியும். ஜில்லா விட்டு ஜில்லா வந்து பாடலில் ஆடிய ஆன்ட்டி நம்மை கவர்ந்தார் என்றால் அந்த புண்ணியம் தினேஷுக்குதான் போய் சேர வேண்டும். மைனாவில் வரும் பஸ் பாடலும் அந்த கருப்பு ஆன்ட்டியும் கவனத்தை ஈர்த்தார்கள் என்றால் அது பாபி புண்ணியம்.

ஜெயம் ரவியின் திடீர் முடிவு பின்னணி காரணம் எது?


அட, இப்படியும் நடக்குமா என்று ஆச்சர்யப்படுகிறார்கள் கோடம்பாக்கத்தில். ஒருJeyam Raviபடத்தின் கதையை எழுதி முடித்ததும் அதை எந்த காட்சியில் இருந்து வேண்டுமானாலும் படம் பிடிக்க ஆரம்பிக்கலாம் என்பதுதான் சினிமாவின் நெளவு சுளிவு. முதலில் க்ளைமாக்சில் இருந்தே கூட படம் பிடிக்கலாம். அல்லது நடுவில் ஏதாவது ஒரு இடத்திலிருந்து எடுப்பார்கள். அவரவர் சவுகர்யத்திற்கு ஏற்றார் போலதான் அமையும் இந்த வரிசைமுறை.
ஆனால் அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் படப்பிடிப்பு அப்படி நடக்கவில்லையாம். டைட்டிலில் ஆரம்பித்து கிளைமாக்சை நோக்கி ஒவ்வொரு காட்சியாக படம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம். வெளிநாட்டில் படப்பிடிப்புக்கு போனால், அங்கு நடப்பதாக எழுதப்பட்ட அத்தனை சம்பவங்களையும் படம் பிடித்து விட்டு வருவதுதானே ஆரோக்கியம்? ஆனால் ஒரே நாட்டுக்கு இரண்டு மூன்று முறை போய் ஷுட்டிங் எடுக்கிற மாதிரி நடக்கிறதாம் இவரது படத்தில் மட்டும்.
                                                                               மேலும் படிக்க....

விளம்பரத்தில் தன் பெயர்.... அதிர்ச்சியில் இசையமைப்பாளர்


S.S.Kumaranகடும் கோபத்திலிருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். பூ, களவாணிபோன்ற நல்ல நல்ல படங்களுக்கு இசையமைத்த இவரை, இவரே இசையமைக்காத ஒரு படத்திற்கு இசையமைத்ததாக விளம்பரம் செய்தால் கோபம் வராதா என்ன?
கடந்த வாரத்தில் வெளிவந்த படம் வெண்மணி. இப்படத்தை கதாக.திருமாவளவன் இயக்கியிருக்கிறார். கார்த்திக் ஜெய் என்பவர் தயாரித்து நடித்தும் இருக்கிறார். இப்படத்தை பார்ப்பவர்களுக்கு சிறு அதிர்ச்சி காத்திருக்கும். ஏனென்றால் இதே கார்த்திக் ஜெய் நடித்து தயாரிக்கவும் செய்த நெல்லு என்ற படத்தையே திரும்பவும் பிளாக் ஒயிட்டில் ஒரு மணி நேரம் ஒடவிட்டிருப்பார்கள் இந்த வெண்மணியில். இது படத்தில் வரும் பிளாஷ்பேக்காம்.
                  மேலும் படிக்க....

தி டர்ட்டி பிக்சருக்கு போட்டியாக ‘சிலுக்கு’-வினு பிடிவாதம்


செத்த பின்பும் கொட்டிக் கொடுத்திருக்கிறார் சில்க். இவரது கதையை பாலிவுட்டில் தி Silk Smitha டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் எடுத்திருந்தார்கள் அல்லவா? வித்யாபாலன் நடித்த அந்த படத்தின் முதல் வார கலெக்ஷனே ஐம்பது கோடியை தாண்டிவிட்டதாம். நமக்கு தோணலையே என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் சில இயக்குனர்கள். இந்த நேரத்தில் சில்க்கை நாட்டுக்கு அர்ப்பணித்த வினுச்சக்கரவர்த்தி இந்த படத்தின் வெற்றி பற்றி என்ன சொல்கிறார்?
சிலுக்கை பற்றி முழுசா தெரிஞ்சா ஒரே ஆள் நான்தான். அது மனசும் அதுக்குள்ள இருந்த வலியும் எனக்குதான் தெரியும். சிலுக்கு கதையை ஏக்தா கபூர் எடுக்கறதை கேள்விப்பட்டவுடனே நான் பேசினேன். ஒரிஜனல் தெரியாம பண்ணினா அது சிலுக்கு படமா இருக்காது. செக்ஸ் படமாத்தான் இருக்கும். ஒரிஜனல் கதையை நான் தர்றேன். கோ-டைரக்டராகவும் வேலை செய்யுறேன். ஒத்த பைசா சம்பளம் வேணாம்னு சொன்னேன். அவங்ககிட்ட இருந்து பதிலே இல்லை. எனக்கு அவங்க கொடுத்த மரியாதை அவ்வளவுதான்.
சரி, நடந்தது நடந்து போச்சு. சிலுக்கோட அப்பழுக்கு இல்லாத உண்மைக்கதையை சிலுக்கு ங்கிற பேர்லேயே எடுப்பேன். அந்த படத்தோட வடமாநில டிஸ்ட்ரிபியூஷனை ஏக்தா கபூருக்கே கொடுப்பேன். அதுக்கு அவங்க ஒரு பைசா பணம் தரத் தேவையில்லை. ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினா அது போதும். சிலுக்கோட ஆத்மா சாந்தி அடைஞ்சுரும் என்கிறார் ஆவேசமாக.
ஆக, சிலுக்குக்கு மற்றுமொரு மறு ஜென்மம் இருக்கு போலிருக்கு. 

மீசையில்லாத போலீஸ்? ஜீவாவின் ஒஸ்தியான பேச்சு


மிஷ்கினின் பல நாள் கனவுதானாம் இந்த முகமூடி. எதையும் 'மூடி' மறைக்காமல்Mugamoodiபேசும் மிஷ்கின், துவக்க நாளான அன்றும் அப்படியேதான் ஆரம்பித்தார் தனது உரையை. இதுவரைக்கும் நான் பார்த்த ஹீரோக்களிலேயே இப்படி ஒரு டெடிக்கேஷனான ஹீரோவை பார்த்ததே இல்லை. ஜீவாவிடம் இந்த கதையை சொல்லணும்னு நினைச்சேன். என் ஆபிஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமான்னு கேட்டேன். அவ்வளவுதான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் என் ஆபிசில் இருந்தார் ஜீவா.
மிஷ்கின் 'இடம் சுட்டி பொருள் விளக்கிய' இந்த இடத்தில் ஒளிந்து கிடக்கும் உண்மைகள், ஆரம்பத்திலிருந்து இந்த முகமூடி பிரசவத்தை கவனித்தவர்களுக்கு மட்டும் சட்டென்று புரிந்திருக்கும். (புரியாதவர்களுக்கு சில டேக்ஸ். கமல், அஜீத், எக்ஸட்ரா...) போகட்டும். விஷயத்துக்கு வருவோம்.
முகமூடி பற்றி நிறைய பேசினார் மிஷ்கின். நான் சின்ன வயசிலே நிறைய காமிக்ஸ் படிச்சிருக்கேன். அந்த கதைகளை படமாக்கணும்னு அப்பவே எனக்கு கனவு இருந்திச்சு. தமிழில் வெளிவரப்போகும் முதல் பிரமாண்ட சூப்பர்மேன் கதையா இந்த முகமூடி இருக்கும். இந்த படத்தை இந்த ஒரு பகுதியோட முடிக்கிற எண்ணமும் எனக்கு இல்லை. முகமூடி பார்ட் ஒன், டூ, த்ரின்னு அது பாட்டுக்கு போயிகிட்டே இருக்கும்னு நம்புறேன்.
இந்த படத்தில் ஜீவா கமிட் ஆனவுடன் குங்பூ கத்துக்கணும் என்றேன். எனக்குMugamoodiஏற்கனவே தெரியும். ரெண்டு வருஷம் அந்த சண்டையை நான் கத்து வச்சிருக்கேன் என்றார். என்னுடைய வேலை இன்னும் சுலபமாச்சு. ஜீவா 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தை முடிச்சு மே மாதம் திரைக்கு கொண்டு வந்துடலாம் என்றார்.
பின்னாலேயே பேச வந்த ஜீவா, 90 நாட்கள் என்ன, 120 நாட்கள் தருகிறேன் என்றார் மிஷ்கினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை போல. வழக்கமாக இருபெரும் நடிகர்கள் முட்டிக் கொள்ளும்போது இடம் கிடைத்தால் போதும். ஒரு வீச்சருவாவை செருகி பார்ப்பார்கள். இந்த முறையும் அதை மின்னல் வேகத்தில் செய்தார் ஜீவா.
மிஷ்கின் சார் அஞ்சாதே படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க என்னைதான் அழைச்சார். சரியா மீசை கூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிக்கறது? அதுக்கெல்லாம் இன்னும் வயசு வரணும் என்பதால் அப்படத்தில் நடிக்கல என்றார்.
ஜீவாவின் 'ஒஸ்தி'யான பேச்சு புரியுதா பிரதர்ஸ்...?
பி(பெ)ண் குறிப்பு - இப்படத்தின் ஹீரோயின் பூஜா ஹெட்டே மிஸ் யுனிவர்சல் போட்டியில் மோதி முன்னேறி இறுதி வரைக்கும் வந்தவராக்கும்...!

Monday 12 December 2011

‘பஞ்ச் டயலாக், பற்றியெறியும் தீக்குச்சி....’ ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து்


எளிமை, இனிமை, இவை தந்த பெருமை இம்மூன்றாலும் தன்னை நெருங்கி வரும் முதுமையை விரட்டிக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவரது பிறந்த நாளை முப்பாத்தம்மன் பால் குடம் மாதிரி கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் ஊர் முழுக்க. எந்த பண்பலை வானொலியை திருப்பினாலும் ஏய் ஆட்டோக்காரன் என்றோ, ஒருவன் ஒருவன் முதலாளி என்றோ பாடிக் கொண்டிருக்கிறார் ரஜினி. சேனல்களிலும் அதே உற்சாக திருவிழா.
உடுக்கை சத்தத்திற்கு முன் ஆடும் பூசாரியின் வேகத்தோடு ரஜினிக்காக தன்னையேRajinikanthதாரை வார்த்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த பிறந்த நாள் மட்டும் இன்னும் இன்னும் விசேஷம். அது ஏன் என்பதை அவ்வளவு அலசி பிழிந்து யோசிக்க தேவையில்லை. இசபெல்லாவில் ஆரம்பித்து சிங்கப்பூர் மருத்துவமனை வரைக்கும் அவரது உடம்பை ரணமாக்கின ஊசிகளும் மாத்திரைகளும். எல்லாவற்றையும் தனதாக்கிக் கொண்டு தவித்தான் ரசிகன்.
வாழ்த்துக்களுக்கு நிகராக, விமர்சன அம்புகளுக்கும் நெஞ்சைக் கொடுத்த புண்ணியவான் ரஜினியாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் அவரை விமர்சித்தவர்கள் கூட, நெஞ்சார பிரார்த்தித்த தருணங்கள்தான் கடந்த சில மாதங்கள். எப்படியோ? எல்லாவற்றையும் கடந்து மரணத்தின் முடிச்சை அவிழ்த்துவிட்டு திரும்பிய வீரனாகிவிட்டார் ரஜினி.
இந்த பிறந்தநாள் மற்றவர்களை போலவே ரஜினிக்கும் சில கடமைகளை விதித்திருக்கிறது. அவற்றை பட்டியலிட்டால் பக்கம் நீளும் என்பதால், ஒரு விஷயத்தை மட்டும் பேசலாம். புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடிப்பதை எப்போதுமே தவிர்த்து வந்த ரஜினி, தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் நடிப்பது குடும்ப விஷயம் என்று ஒதுக்கிவிட முடியாது. அதே நேரத்தில் தனது மகளின் திரையுலக பிரவேசத்திற்கு தன்னைவிட சிறந்த வழிகாட்டியும் கிடையாது என்று அவர் நினைத்திருக்கலாம்.
கோச்சடையான் படம் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி துவங்கப்பட்டிருக்கிறது.Rajinikanthபொதுவாகவே ரஜினியின் புதுப்படங்கள் இப்படி வெறும் அறிவிப்போடு துவங்கப்படுவதல்ல. பெரிய பெரிய போஸ்டர்கள், பூஜை, துவக்க விழா என்று ஏக தடபுடலாக இருக்கும். ஆனால் இவை எதுவும் இல்லாத கோச்சடையான் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது மீடியாக்களிடத்திலும் மக்களிடத்திலும். ஊர் வாயை அடைக்கவாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்த கட்டாயம் சவுந்தர்யாவுக்கு இருக்கிறதோ, இல்லையோ. ரஜினிக்கு இருக்கிறது.
ரஜினியின் டெடிக்கேஷன் பற்றி ஆயிரமாயிரம் சம்பவங்கள் சொல்வார்கள் திரையுலகத்தில். பஞ்ச் டயலாக் பேசிவிட்டு படக்கென்று கிடைக்கிற இடத்தில் தீக்குச்சி கொளுத்துவாரே, அந்த வித்தை எப்படி தெரியுமா? எந்த இடத்தில் நெருப்பு பற்ற வேண்டும் என்று நினைக்கிறாரோ, அந்த இடத்தில் தீப்பெட்டியில் உரசும் பகுதியிலிருக்கும் அந்த மருந்து தடவப்பட்ட பேப்பரை கிழித்து தன் கைப்படவே ஒட்டுவாராம். ஒருவேளை தேய்க்க வேண்டிய இடம் முழுங்கால் பேண்ட் பகுதி என்று வைத்துக் கொள்ளுங்களேன். அந்த பேண்ட்டை வரவழைக்க செய்து, குறிப்பிட்ட பகுதியில் அந்த பேப்பரை வைத்து தன் கைப்படவே ஊசி நுலால் தைப்பாராம்.
இதை அவர் கேட்டால் செய்து தர ஆயிரம் பணியாளர்கள் தயாராக இருந்தாலும் அதை தன் கையால் செய்வதுதான் அவருக்கு திருப்தி. இப்படி ரசிகர்களுக்காக தன்னை எந்நேரமும் ஈடுபடுத்திக் கொண்ட அந்த மாபெரும் நடிகர், கோச்சடையான் விஷயத்திலும் வென்று காட்ட வேண்டும் என்பதே நமது tamilcinema.com-ன் பிறந்த நாள் வாழ்த்து.
வாழ்க ரஜினி, வளர்க அவரது ஸ்டைல்...

Sunday 11 December 2011

ரஜினி ஜோடி அசின்?

Rajinikanth and Asinகோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அசினுடன் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.

ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான், மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கப்படும் 3 டி சினிமாவாகும். ரஜினி இதில் கோச்சடையான் என்ற பாண்டிய மன்னனாக வருகிறார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வந்தனர். அவர் 2012 வரை படுபிஸி என்பதால், கால்ஷீட் ஒதுக்க முடியாமல் திணறினார்.

இந்த நிலையில், இப்போது அசினுடன் பேச்சு நடப்பதாகத் தெரிகிறது. அசினுக்கு கைவசம் பெரிதாக படங்கள் ஏதுமில்லை. இந்தியல் ஒரு படம் ஒப்பந்தமாகியுள்ளார்.

எனவே அவர் ரஜினியுடன் நடிக்க தாராளமாக கால்ஷீட் தருவார் என்கிறார்கள்.

இந்தப் படத்தில் ரஜினி தங்கையாக நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

பவன் கல்யாண் படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் நீக்கம்-இலியானா சேர்ப்பு

Shruti Hassanதெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஸ்ருதி ஹாசன் தற்போது படத்தில் இல்லையாம். அவருக்குப் பதில் இலியானாவை ஹீரோயினாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தெலுங்கில் உருவாகும் புதிய படம் கப்பார் சிங். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இதில் முதலில் ஹீரோயினாக தேர்வானவர் ஸ்ருதி ஹாசன். ஆனால் தற்போது இலியானாவைத் தேடிப் போயுள்ளனராம்.

இந்தப் படம் வேறு எதுவுமல்ல, இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமேக்தான். ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தபாங் ஏற்கனவே தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆகியஉள்ளது. டிசம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம்தான் தெலுங்கில் கப்பார் சிங் என்ற பெயரில் உருமாறி வருகிறது.

ஸ்ருதி ஹாசன் நீக்கத்திற்கான காரணம் தெரியவில்லை. அதேபோல இலியானாவைத் தேடிப் போனதற்கான காரணமும் தெரியவில்லை. ஒருவேளை கவர்ச்சிக்காக இலியானாவைச் சேர்க்க திட்டமிட்டனரா என்பதும் தெரியவில்லை.

ஆனால் ஸ்ருதி ஹாசன் நீக்கத்தால் நடிகை அமலா பால் சந்தோஷமானதாக ஒரு தகவல் கூறுகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 3 படத்தில் முதலில் அமலா பால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்குப் பதில் ஸ்ருதி ஹாசன் நடித்தார். இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனுக்கு பெரிய பட வாய்ப்பு தெலுங்கில் பறிபோன தகவல் அமலா பாலுக்கு ஹேப்பி நியூஸாக தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான் அப்படியெல்லாம் கிடையாது! - த்ரிஷா

திடீரென்று ஒரு நாள் மாப்பிள்ளை பார்ப்பதாக செய்தி வரும்... அடுத்த நாளே த்ரிஷா தெலுங்குப் படத்தில் ஒப்பந்தம் என்றொரு செய்தி. இன்னொரு நாள் த்ரிஷாவுக்கு அமெரிக்க தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் என்ற செய்தி... இன்னும் இரு தினங்களில், தமிழில் விஷாலுடன் புதுப்படத்தில் ஒப்பந்தம் என்ற அறிவிப்பு... 

என்னதான் நடக்கிறது? புதிய வாய்ப்புகளைப் பிடிக்க த்ரிஷா கையாளும் உத்தியா... 'கால்ஷீட் வேணும்னா இப்பவே வாங்க... இல்லன்னா கல்யாணம்தான்,' என்று மறைமுகமாக சொல்ல வருகிறாரா? த்ரிஷாவிடம் கேட்டால், "ம்ஹூம்... நான் அப்படியெல்லாம் கிடையாது" என்கிறார்.

"இன்னமும் ஓடிப்போய் சான்ஸ் கேட்கும் நிலையிலா நான் இருக்கேன்.... எனக்கான ரோல்களை நான் மட்டும்தான் பண்ணமுடியும். அதனால்தான் என்னைத் தேடி வாய்ப்புகள் வருகின்றன. கல்யாணம் பண்றது பத்தி இன்னும் முடிவு பண்ணல. என்னைப் புரிந்தவர்தான் எனக்கு கணவனாக முடியும். 

காரணம், எனக்கு நாய்கள்னா ரொம்பப் பிரியம். நிறைய நாய்கள் வளர்க்கிறேன். ஆனால் நாயே புடிக்காத ஒருத்தரைக் கட்டிக்கிட்டு நான் என்ன செய்வேன்... என் லைஃபை அப்புறம் யோசிக்கவே முடியாதே. அதனால சகல விதத்திலும் என்னைப் புரிஞ்சவர்தான் கணவராக இருக்கணும். அப்படியொருத்தரை நான் இன்னும் பார்க்கவே இல்லையே," என்கிறார் த்ரிஷா.

ராணாவில் நடிக்க மாட்டார் தீபிகா படுகோன்?

http://gallery.oneindia.in/celebs/deepika-padukone-11180.htmlராணா படத்தை அதன் தயாரிப்பாளர்கள் கிடப்பில் போட்டு விட்டதால் கடும் அப்செட்டாகியுள்ளாராம் தீபிகா படுகோன். இந்தப் படத்துக்காக கால்ஷீட் ஒதுக்கி இத்தனை காலமாக காத்திருந்தும், தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், படத்தை நிறுத்தி வைத்ததால் அவர் கடும் அப்செட்டாகி விட்டாராம். இதனால் ராணா படத்தில் நடிக்கும் எண்ணத்தையும் அவர் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன் படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம் குறித்து பெரும் குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது. முதலில் சுல்தான் தி வாரியர் என்ற படத்தைக் கூறி வந்தனர். பின்னர் ராணா என்ற பெயரில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கான பூஜையும் போடப்பட்டது. தீபிகா படுகோன் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தீபிகாவும் உற்சாகமாக இருந்தார். ஆனால் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, ராணா படப்பிடிப்பு நின்று போனது. அவர் உடல் நலம் குணமடைந்து திரும்பினாலும் கூட அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருப்பதால் அவரை ராணா படத்தில் நடிக்க வைப்பது குறித்து குடும்பத்தினரும், படக்குழுவினரும் தீவிர சிந்தனையில் மூழ்கினர்.

இந்த நிலையில்தான் கோச்சடையான் என்ற புதிய பட அறிவிப்பை வெளியிட்டனர். இந்தப் படத்தை அதி நவீன தொழில்நுட்பத்தில், எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவை நாடியுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் மேற்பார்வைப் பணியைக் கவனிக்கப் போகும் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

இதனால் ராணா பட நாயகி தீபிகா கடும் அப்செட்டாகியுள்ளாராம். ராணா படம் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது குறித்து அவரிடம் கருத்து கேட்போரிடம், அதுகுறித்து என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும். நான் இப்போது மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ராணா படம் குறித்து எனக்கு ஒரு தகவலும் தெரியாது. எனவே அதுகுறித்து என்னிடம் கேட்காதீர்கள் என்கிறாராம்.

தீபிகா இப்படி மறைமுகமாக கூறினாலும் கூட இப்படத்தில் நடிக்கும் திட்டத்தை தீபிகா கைவிட்டு விட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. மாறாக, ராணா படத்துக்காக ஒதுக்கி வைத்திருந்த கால்ஷீட்களை தற்போது புதிய இந்திப் படங்களுக்கு அவர் ஒதுக்கிக் கொடுத்து விட்டாராம். மீண்டும் ராணா படத் தரப்பில் தன்னை அணுகினாலும் அவர் மறுத்து விடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கமல்ஹாசனின் விஸ்வரூபம், ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் புதிய படம் உள்ளிட்ட பல முக்கியப் படங்களிலும் நடிக்க தீபிகாவை அணுகினர். ஆனால் அவர் நடிக்க முன்வரவில்லை. தற்போது ரஜினி படத்திலிருந்தும் அவர் நழுவவுள்ளதாக தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.