மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Friday 16 December 2011

வெற்றிமாறனை அதிர வைத்த தலைப்பு சமாச்சாரம்


பொன்னை வைத்த இடத்தில் புண்ணாக்கை வைத்த மாதிரி என்னப்பா சோதனை இதுvetrimaranஎன்று அலறுகிறார்கள் வெற்றிமாறன் ஆபிசில். கிணற்று வெள்ளத்தை ஆற்று வெள்ளமா அடித்துக் கொண்டு போகும் என்ற சொலவாடையை சூர்ப்பனகை மூக்கறுத்த மாதிரி அறுத்து தள்ளிவிட்டார் பவர் ஸ்டார்.
விஷயம் இதுதான். பொல்லாதவன் படத்தை எடுப்பதற்கு முன்பே வெற்றிமாறன் மனதில் இருந்த கதையும் அதற்கான தலைப்பும் தேசிய நெடுஞ்சாலை என்பதுதான். ஆனால் முதலில் பொல்லாதவன் எடுப்போம். அப்புறம் பார்க்கலாம் தேசிய நெடுஞ்சாலையை என்று கூறிவிட்டார் தயாரிப்பாளர்.
ஆனால் தன் முதல் கதையை எப்படியாவது படமாக்கிவிட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் யோசிக்கும் வெற்றிமாறன், தற்போது இயக்கி வரும் வடசென்னை முடிந்ததும் தேசிய நெடுஞ்சாலைதான் என்று முடிவே செய்திருந்தாராம். இந்த நேரத்தில்தான் 'பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் தேசிய நெடுஞ்சாலை' என்று நாளிதழ்களில் விளம்பரம் வந்து வெற்றி மாறனை வெறி கொள்ள வைத்துவிட்டது.
என்னாச்சு என்று விசாரித்தால், மேற்படி தலைப்பை ரினீவல் செய்யாமல் விட்டு விட்டார்களாம் வெற்றி மாறன் தரப்பில். இதற்காகவே காத்திருந்த சீனிவாசன் டைட்டிலை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டாராம்.
ஒருமுறை பவர் ஸ்டார் படம் போட்டு விளம்பரம் வந்தபின் அந்த தலைப்பை பற்றி இனிமேல் கனவில் கூட யோசிக்க வேண்டாம். எல்லாம் எண்ணெய் தேய்ச்சு குளிங்கப்பா என்று குமைந்துவிட்டாராம் வெற்றிமாறனும்.

No comments:

Post a Comment