மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Friday 16 December 2011

வடிவேலு மீது கொலை கேஸ் மேனேஜர் சாவில் மர்மம்


எக்கச்சக்க சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. நில மோசடி, அல்லது நிலத்தை வாங்கி ஏமாந்த விவகாரம் என்று மிக சாதாரணமாகதான் இருந்தது அவரதுvadiveluபோலீஸ் ஸ்டேஷன் போக்குவரத்து. திடீரென்று கொலை, சாவு, ஒப்பாரி என்று இதே போலீஸ் ஸ்டேஷன் போக்குவரத்து வேறு திசையில் திருப்பிவிடப் பட்டிருப்பதால் அவரும் அவருக்கு நெருக்கமானவ்ர்களும் இப்போது பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
வடிவேலுவின் மேனேஜராக இருந்த வேலுச்சாமி திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அப்போதே இந்த சாவில் மர்மம் இருப்பதாக கிசுகிசுத்தார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால் பல வருடங்கள் கழித்து இந்த பிரச்சனையை கொலை என கூறி அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறார் வேலுச்சாமியின் மனைவி பாண்டீஸ்வரி.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பாண்டீஸ்வரி கூறியிருப்பதாவது-
'நடிகர் வடிவேலுவிடம் எனது கணவர் வேலுச்சாமி மேனேஜராக வேலை பார்த்தார். கடந்த 4.2.2009-ல் வேலுச்சாமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வடிவேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வடபழனி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது கணவரை வடிவேலு கொலை செய்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்.
கடந்த ஆட்சியில் தி.மு.க. தலைவர்களிடம் வடிவேலு நெருக்கமாக இருந்தார். இதனால் அவருக்கு எதிராக என்னால் புகார் கொடுக்க முடியவில்லை. 19.8.2011-ல் எனது கணவர் சாவு குறித்து சந்தேகம் எழுப்பி போலீஸ் டி.ஜி. பி.யிடம் புகார் மனு அளித்தேன். அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு இரு மகன்கள் உள்ளனர். எங்களுக்கு மிரட்டல்கள் வருகிறது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது கணவர் சாவு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாண்டீஸ்வரி சார்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜராகி வாதாடும் போது நடிகர் ராஜ்கிரணிடம் வடிவேலுவை அறிமுகம் செய்து வைத்தது வேலுச்சாமிதான். முதலில் வேலுச்சாமி ராஜ்கிரணிடம் கணக்கு பிள்ளையாக இருந்தார். பிறகு வடிவேலுக்கு மானேஜரானார்.
நில மோசடி பிரச்சினை எழுந்த போது வேலுச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதில் சந்தேகம் எழுகிறது. இந்த சாவு குறித்து பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். இது வரை கோர்ட்டுக்கு அனுப்பப்படவில்லை என்றார். இதையடுத்து பாண்டீஸ்வரி புகார் மனு குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி போலீஸ் டி.ஜி.பிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment