மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday 18 December 2011

மணியா இருந்தாலும்... சுஹாசினி சமாளிப்ஸ்...

சென்னை சர்வதேச திரைப்படவிழாவை ஒட்டி இவ்வளவு சர்ச்சைகள் கிளம்பும் என்று suhasini maniratnamசுகாசினியே சற்றும் எதிர்பார்க்கவில்லை. சுகாசினியும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து இந்தோ ஃபிலிம் அப்ரிசியேஷன் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்கள். அந்த அமைப்பின் ஒன்பதாவது சர்வதேச திரைப்படவிழா டிசம்பர் 14 அன்று சென்னையில் துவங்கியது. இதில் திரையிட ஆடுகளம், அவன் இவன், முரண், உட்பட சில தமிழ்ப்படங்களைத் தேர்வு செய்திருந்தார்கள். இந்தப்பட்டியலில் தங்கள் படம் இடம் பெறவில்லை என மூன்று தேசிய விருதுகள் பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் இயக்குனர் போர்க்கொடி தூக்க, அவரோடு செங்கடல்’ படத்தின் இயக்குனர் லீனாமணிமேகலையும் சேர்ந்துகொண்டார்
இவர்களுக்கு சப்போர்ட்டாக நின்று, விழாவைப் புறக்கணிப்பதாக இயக்குனர்கள் சங்கம் அறிவித்ததும், சுகாசினிக்கு இன்னும் தர்ம சங்கடமாகப் போய்விட்டது.
நாங்கள் வெப்-சைட்டில் விளம்பரம் கொடுத்தபோது,எங்களைத்தொடர்பு கொள்ளாதது அவர்கள் தவறு. இதே தவறை என் கணவர் மணிரத்னம் செய்திருந்தாலும் அவர் படம் இந்த விழாவில் இடம் பெற்றிருக்காது என்று மீடியாவின் வாயை அடைத்துவிட்டார் சுஹாசினி.

No comments:

Post a Comment