மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Thursday 1 December 2011

ஸ்ரீராம ராஜ்ஜியம் பிளாப் - சோகத்தில் நயன்தாரா


பல மாதங்களாக காத்துக்கிடந்து காத்துக்கிடந்து கடைசியில் ஏமாந்து போய்விட்டார்Nayantharaநயன்தாரா. இது இல்லற சோகமல்ல, சினிமா சோகம். தனது கடைசி படம் என்று அறிவித்துவிட்டு நயன்தாரா நடித்த ஸ்ரீ ராமராஜ்யம் திரைப்படம் ஆந்திராவில் வெளியானது. ஓடுகிறதா என்றால், உதட்டைதான் பிதுக்க வேண்டும். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் பிளாப் ரிசல்ட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் தேம்பிக் கொண்டிருக்கிறாராம் நயன்தாரா.
இப்படத்தில் சீதையாக நடித்திருக்கிறார் நயன். இந்த ஒரு காரணத்திற்காகவே அசைவம் தவிர்த்து, குஷன் பெட் தவிர்த்து, தரையில் படுத்துறங்கி ஏகப்பட்ட சுய அவஸ்தைகளை சந்தித்தார் அவர். இவ்வளவு முயற்சிக்கும் இதுதான் பலன் என்றால் எப்படியிருக்கும்?
இவ்வளவுக்கு பிறகும் நயன்தாராவுக்கு கிடைத்த ஒரே ஆறுதல், இசைஞானி இளையராஜாவின் பாராட்டு மட்டும்தான். உன்னை நிஜ சீதையை பார்க்கிற மாதிரியே இருந்திச்சு என்றாராம் அவர்.
ஏன் இந்த படத்தை நிராகரித்தார்கள் ரசிகர்கள்? சீதை கடத்தப்பட்டு அவளை ராமன் தேடிப் போகிற கதையல்லவாம் இது. சீதையை மீட்டு மீண்டும் அரியணை ஏறும் ராமனின் காலத்தை காட்டுகிற படமாம். அதனால்தான் இத்தனை பெரிய கொட்டாவியாம் ரசிகர்களிடத்தில்!

No comments:

Post a Comment