மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Friday 4 November 2011

போராளி இலங்கையில் ரிலீசாகாது -சசிக்குமார் அதிரடி


சட்டென்று உணர்ச்சிவசப்படுவதுதான் கலைஞர்களின் இயல்பு. அதுவும் இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பற்றி நினைத்தால் மேலும் உணர்ச்சி பிழம்பாகிவிடுவதும் அவர்கள்தான். லேட்டஸ்ட் கொந்தளிப்பு சசிகுமாரிடமிருந்து.
போராளி படத்தில் ஹீரோவாக நடிக்கும் அவர், இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட.Poraliஇப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை இலங்கைக்கு தரவில்லையாம் அவர். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சசி, துக்க வீட்டில் சினிமா பார்ப்பது போலதான் நாம் படத்தை இலங்கையில் வெளியிடுவதும். தமிழர்களை பற்றி எது பேசினாலும் அந்த படத்தை வெளியிட தடை விதிப்பது இலங்கை அரசின் வழக்கமாக இருக்கிறது. அவர்கள் என்ன நமக்கு தடை விதிப்பது? நாம் அவர்களுக்கு தடை விதிப்போம் என்றுதான் போராளி படத்தின் எப்எம்எஸ் உரிமையை தரவில்லை என்று கூறியிருக்கிறார் சசி.

No comments:

Post a Comment