மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday 1 November 2011

இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா காலமானார்... - திரையுலகம் கண்ணீர் அஞ்சலி


Jeevaஇசைஞானி இளையராஜாவின் மனைவி திருமதி ஜீவா நேற்றிரவு சென்னையில் காலமானார். நள்ளிரவில் அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக கூறினர். அவருக்கு வயது 60.
இந்த அதிர்ச்சியான தகவல், ஐதராபாத்திலிருந்த இசைஞானி இளையராஜாவுக்குதெரிவிக்கப்பட்டது. அவசரம் அவசரமாக சென்னை திரும்பிய அவர், மனைவியின் உடலை பார்த்து கண்ணீர் சிந்தினார். திரைத்துறையில் அசையாத இடத்தை பிடித்த இசைஞானிக்கு ஏணியாக இருந்தவர் ஜீவா. அதுமட்டுமல்ல, தனது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, மகள் பவதாரிணி ஆகியோரின் திரையுலக பணிகளுக்கும் ஊக்கமாக இருந்து வந்தார்.

                        மேலும் படிக்க....  

No comments:

Post a Comment