மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday 22 October 2011

என்னோட போகட்டும்... பூர்ணாவின் பொறுப்பான பதில்


ஆறு பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி என்றொரு பழமொழி உண்டு தமிழில்.Poornaஇதை அப்படியே மூக்கை அடைத்துக் கொண்டு மொழி பெயர்த்தால் மலையாள பழமொழியாகிவிடும். ஆறு தங்கைகளுடன் பிறந்த பூர்ணாவின் குடும்பம் இப்போது சகல சந்தோஷத்தோடு இருக்கிறது. அதற்கு ஒரே காரணம் பூர்ணாதான்.
படித்துக் கொண்டிருந்த போதே ஸ்கூல் டிராமாவில் நடித்தவர். இதை விஷுவலாக பார்த்துவிட்டுதான் படத்தில் நடிக்கவும் அழைப்பு வந்தது. இதெல்லாம் பழங்கதை. தனது ஐந்து தங்கைகளுக்காகவும் உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்த பூர்ணா படிப்பை விட்டுவிட்டு படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் இவரது நடிப்பில் வெளிவந்த ஒரு படமும் பெரிய வெற்றியை தரவில்லை என்றாலும், எப்படியோ போராடி சொந்த ஊரில் பெரிய பங்களா கட்டிவிட்டார். பொட்டு தங்கமாக இருந்தாலும் அதை விற்று தொலைத்தால்தான் வீட்டை கட்ட முடியும் என்கிற அளவுக்கு இருக்கிறது கட்டுமான பொருட்களின் விலை. அப்படியெல்லாம் சிரமப்பட்டு வீட்டை கட்டிய பூர்ணாவுக்கு நடித்து முடித்த இடத்திலிருந்தெல்லாம் பண பாக்கி இருக்கிறதாம்.
அண்மையில் ஆடியோ ரிலீஸ் நடத்திய ஒரு நிறுவனம் கூட இவருக்கு சம்பள பாக்கி வைத்திருக்கிறது. கேட்டு கேட்டு பார்த்தவர் கடைசி வரை வந்து சேராததால்தான் அந்த விழாவுக்கே வரவில்லையாம். இதையெல்லாம் கூட சகஜம் என்று எடுத்துக் கொள்ளும் பூர்ணா, தங்கைகளையும் சிலர் நடிக்க அழைப்பதைதான் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறாராம். இந்த பொழப்பு என்னோட போகட்டும். அவர்களாவது படித்து பெரிய பெரிய ஆபிசராகணும் என்கிறாராம்.

No comments:

Post a Comment