தெலுங்கானா பிரச்சனை தீயாக வாட்டிக் கொண்டிருக்கிறது மக்களை. அதுவும் பேச்சுலர்கள் பாடு படு திண்டாட்டம். கடந்த பல மாதங்களாகவே ஆந்திரா ஏரியாவில் கலவரம், கல்வீச்சு, படுகாயம் என்று ஒரே டெரர். இதில் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறாராம் த்ரிஷா.
இதென்ன மாங்காய் ஒரு பக்கம், மசக்கை இன்னொரு பக்கம்னு வித்தியாசமான விஷயமா இருக்கே? இதில்தான் விஷயமே இருக்கிறது. ஆந்திராவில் ஒரு ஸ்டார் ஓட்டல் கட்டிக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இதன் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. விரைவில் இதன் திறப்பு விழாவை நடத்தி ஓட்டல் மேனேஜ்மென்ட்டில் கரை கண்டவரான தன் அப்பாவையே கல்லாவில் உட்கார வைத்துவிடலாம் என்பது அவரது கணக்கு. ஆனால் அத்தனையும் இந்த கலவரத்தால் டிலே ஆகிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறை செய்தி தாளை விரிக்கும் போதெல்லாம் ஆந்திராவில் கலவரம். ரயில்கள் மறியல். பஸ்களில் கல்வீச்சு என்று படிக்கிறாரா? கவலை தாங்க முடியவில்லையாம். அடப்பாவமே...
www.tamilcinema.com
No comments:
Post a Comment