மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Friday 28 October 2011

எனக்கும் ஒரு கலைமாமணி தொடர் தொல்லையில் தேவா


கடந்த வருடம் நடந்த கலைமாமணி விருது வழங்கும் விழாவில் ஒரு அபூர்வ காட்சியை பார்க்க முடிந்தது. பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலைமாமணி விருது பட்டியலில் இருந்தார். ஆசை ஆசையாக விருது வாங்க வந்தவருக்கு பலத்த அதிர்ச்சி. மிக நீண்ட வரிசை இருந்தது. அதில் இவருக்கு முன்னால் குண்டு ஆர்த்தியும், பின்னால் கஞ்சா கருப்பும் இருந்தார்கள். இந்த அதிர்ச்சி இந்த வருடமும் தொடருமா?
கோடம்பாக்கத்தில் விசாரித்தால் ஒரே காமெடிதான்...
இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமிக்கப்பட்ட தேவாவுக்கு தினந்தோறும் புதுப் புது தொல்லைகள் வருகின்றனவாம். இந்த வருஷம் கலைமாமணி விருதுக்கு ஆளுங்களை செலக்ட் பண்ணும்போது நம்பளை மறந்துராதீங்க என்று கேட்டே தினம் நாலு பேர் வருகிறார்களாம். இதுக்கு முன்னாடி எப்படியோ? சிறந்த கலைஞர்களுக்கு மட்டும்தான் விருது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் தேவா.
நேற்று வந்த தமன்னாவுக்கு கூட கலைமாமணி விருது கிடைத்துவிட்டது. ஆனால் நடிகர் சிவகுமாருக்கு இன்னும் அந்த விருது கிடைக்கவில்லை தெரியுமா என்றார் ஒரு திரைப்பட முக்கியஸ்தர். கேட்கவே அதிர்ச்சியாக இருந்தது.
தேவா சார். மனசுல வச்சுக்கோங்க.
                                  www.tamilcinema.com

No comments:

Post a Comment