மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Monday 24 October 2011

மழையும் மண்வாசனையும்... வியக்க வைக்கும் சினேகா-நமீதா நட்பு


இரண்டு நடிகைகள் ஓரிடத்தில் இருந்தால் அந்த இடமே இஸ்திரி பெட்டி மாதிரிதான் இருக்கும். அந்தளவுக்கு சூடு மற்றும் பொற்ற்ற்றாமை வழிந்தோடும். இப்படி தலைSneha - Namithaவிரித்தாடுகிற ஈகோக்களுக்கு மத்தியில் மழையும் மண்வாசனையுமாக இருக்கிறார்கள் சினேகாவும் நமீதாவும். நான் அவனில்லை படத்தில் இருவரும் ஒன்றாக நடித்ததிலிருந்தே இந்த பிரண்ட்ஷிப் தொடர்கிறதாம்.
நடிகர் நடிகைகள் என்று ஒரு அந்தஸ்தில் இருந்தாலும், சில நேரங்களில் எங்களுக்கும் கவலைகள் வரும். அப்படி ரொம்ப டிப்ரஷனா இருக்கிற நேரத்தில் மும்பையிலிருக்கும் நமீதாவுக்கு போன் அடிப்பேன். அவ்வளவு ஆறுதலா பேசுவாங்க. அப்பா அம்மாவை தாண்டி நட்புக்கு இருக்கிற ஒரே பலமே அவங்ககிட்ட சில விஷயங்களை மனம் விட்டு பேசலாம்ங்கிறதுதான். அந்த வகையில் நான் ரொம்ப நேசிக்கிற தோழி நமீதாதான் என்கிறார் சினேகா.
கிளாமரை நேசிக்காத சினேகாவும், கிளாமரை தவிர வேறெதையும் யோசிக்காத நமீதாவும் இணைபிரியா தோழிகளாக இருப்பதே ஒரு அழகுதான் என்றால் அதைவிட இன்னொரு அழகு இருக்கிறது இந்த நட்பில். சினேகாவையும் ’மச்சான்’ என்றே அழைக்கிறார் நமீதா.
                            www.tamilcinema.com

No comments:

Post a Comment