மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Thursday 8 December 2011

நிருபர்கள் கேள்வி நிதானம் தப்பாத சேரன்


முல்லை பெரியாறு அணையின் ஒவ்வொரு கல்லையும் குறிவைத்து தகர்க்கCheranதுடித்துக் கொண்டிருக்கிறார்கள் கேரளாவிலிருக்கும் சில கலவரக்காரர்கள். இரு மாநில எல்லை பகுதிகளிலும் பெரும் கலவரம் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்திய ‘டேம் 999’ என்ற திரைப்பட இயக்குனர் அதற்காக கவலைப்பட்டாரா என்று தெரியாது. ஆனால் சேரன் ரொம்பவே கவலைப்பட்டிருக்கிறார்.
மூன்று பேர், மூன்று காதல் படப்பிடிப்பு கேரளவில் நடந்து வருகிறது. இப்படத்தை டைரக்டர் வசந்த் இயக்கிக் கொண்டிருக்கிறார். சேரன் இங்கு இருப்பதை அறிந்த நிருபர்கள், முல்லை பெரியாறு அணை சம்பந்தமான பிரச்சனையில் உங்கள் கருத்து என்ன என்று கேட்கிறார்களாம். தினந்தோறும் இப்படி ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து வம்பை கிளப்ப திட்டம் போடும் அவர்களை கண்டு சற்று அதிர்ந்து போயிருக்கிறார் சேரன்.
சும்மாவே எதையாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும் அவர் இந்த முறை செம கெட்டியாகிவிட்டார். இங்க ஷுட்டிங் ஸ்பாட்ல வேண்டாம். ரூமுக்கு வாங்க, அங்க பேசிக்கலாம் என்று எஸ்கேப் ஆனாராம். அப்படியே ரூமுக்கு வருகிற நிருபர்களிடம், இங்க வேண்டாம் ஸ்பாட்டுக்கு வாங்க என்றாராம். எப்படியோ படப்பிடிப்பு முடிகிற வரை இப்படியே தள்ளி போட்டால் தன்னால் ஒரு கலவரம் வந்து தொலையாதே என்பது அவரது யோசனை.
ஹ்ம்ம்ம்... எல்லா இடத்திலும் இது தொடரணும்.

No comments:

Post a Comment