மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Thursday 8 December 2011

நானே நடிச்சிருப்பேனே... சோனியா கதைக்கு சிம்ரன் ஆசை


பூஜை போடும் போது இருக்கிற அந்தஸ்தை, அதே படம் வெளிவருவதற்குள் இழந்து Simranவிடுகிற நடிகைகள் மத்தியில், சோனியாவுக்கு மட்டும் இன்னும் சுக்கிர திசை ஓடிக்கொண்டிருக்கிறது. காதல், கல்யாணம், டைவர்ஸ் என்று சுற்றிவிட்ட பம்பரம் போல எங்கெங்கோ திரிந்தாலும், மறுபடியும் முழுமையான ஹீரேயினாக கோடம்பாக்கத்தில் லேண்ட் ஆகிவிட்டார்.
ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனவுடனேயே ஏராளமான அழைப்புகள் சுற்றி சுற்றி வருகிறதாம் சோனியாவுக்கு. படம் வெளிவரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்பது அவரது நோக்கம். (வேறென்ன, சம்பளத்தை ஒசத்தலாமே)
இந்த நேரத்தில்தான் ‘என்னை கேட்டிருந்தா நானே நடிச்சிருப்பேனே’ என்று அப்படத்தின் இயக்குனர் ராஜ்கிருஷ்ணாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார் சிம்ரன். சில தினங்களுக்கு முன் சிம்ரனை வேறொரு விஷயமாக சந்தித்தாராம் ராஜ்கிருஷ்ணா. அப்போது பேசிய சிம்ரன், இப்படத்தின் விளம்பரங்களையும் பாடல் காட்சிகளையும் நான் பார்த்தேன். மிகவும் நாகரீகமாக இருந்தது. அதே நேரத்தில் ஒரு நடிகையின் மனரீதியான போராட்டங்களும் அதில் இருப்பதை உணர்ந்தேன்.
சோனியாவிற்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவரை சந்தித்து கதை சொல்வதற்கு முன்பு என்னை சந்தித்திருந்தால் நானே நடித்திருப்பேன் என்றாராம். கையோடு சிம்ரன் சொன்ன இன்னொரு தகவல், பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது.
‘மற்றவர்கள் எப்படியோ? நான் ரொம்ப நிம்மதியாகவும் சந்தோஷமாகவும்தான் இந்த ஃபீல்டில் இருக்கேன்’ என்றாராம் அவர். 

No comments:

Post a Comment