மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday 4 December 2011

மயில்சாமி மகன் படம் பாதியில் நின்றதா?


மயில்சாமியின் மனசு மடேர் என்று உடைவது மாதிரி ஒரு நியூஸ். தனது மகன்Parthom Palaginomஅருமை சந்திரனை பெரிய கனவோடு சினிமாவில் அறிமுகப்படுத்தினார் அவர். ராசு.மதுரவன் இயக்கத்தில் பார்த்தோம் பழகினோம் என்ற படத்தின் மூலம் இவரை அறிமுகப்படுத்தினார் மயில். ஆனால் இந்த படம் பூஜை போட்டு முதல் ஷெட்யூலை தாண்டி நகரவில்லையாம். ஏன்?
அந்த காரணத்தை ஆராய்வானேன்? வெந்த புண்ணில் விரலை பாய்ச்சுவானேன்? படம் டிராப். அவ்வளவுதான் செய்தி. ஆனால் இந்த அருமை சந்திரன் பார்ப்பதற்கு அத்தனை லட்சணம். சென்னை லயோலா கல்லுரியில் விஷுவல் கம்யூனிக்கேஷன் முடித்த இவரை எங்கோ ஓரிடத்தில் பார்த்தாராம் அஜீத். பையன் நல்லாயிருக்கான். நல்ல இயக்குனர்களின் கையில் சிக்கினால் பெரிய எதிர்காலம் இருக்கு என்றாராம்.
அவரது வாய்மொழிக்கு ஏற்ற மாதிரி, வெற்றிமாறன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குனர்கள் வாய்ப்பு தருவதாகவும் சொன்னார்களாம். ஆனால், ராசு.மதுவரன் சொன்ன கதையில் நான் உருகிட்டேன். இதுதான் என் மகனை அறிமுகப்படுத்த சரியான படம் என்றார் மயில்.
இப்போது கேட்டால் சரியான ‘பாடம்’ என்பாரோ என்னவோ?

No comments:

Post a Comment