மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday 5 October 2011

நடிக்காத படப்பிடிப்பில் , நகராத சமீரா ரெட்டி!


நீதானே என் பொன்வசந்தம் படப்பிடிப்பில் அடிக்கடி தென்படுகிறார் சமீரா ரெட்டி. அந்த Sameera Reddyபடத்தில் இவர் நடிப்பதால் அங்கு வந்திருக்கலாம் என்று யாரேனும் நினைத்தால் அந்த எண்ணத்தை உடனே அழித்துவிடவும். இவருக்கும் இந்த படத்திற்கும் இருக்கிற ஒரே சம்பந்தம் இது கவுதம் மேனன் படம் என்பது மட்டுமே.
குளத்துல இறங்கும்போதே மீன் கடிக்கும் என்று இறங்கினால் முள் குத்தினால் கூட ஒன்றும் ஆகாது என்பார்கள். சமீராவும் அப்படிதான். நடிகைன்னா அப்படி இப்படின்னு எழுததான் செய்வாங்க. அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணினா எந்த விஷயமும் நடக்காது என்கிற டைப். எனவே படப்பிடிப்புக்கு இவர் தொடர்ந்து வருவதும் ஹாயாக அமர்ந்து வேடிக்கை பார்க்கவும் முடிகிறது.
இதற்கிடையில் கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட அனுஷ்கா தற்போது அப்படத்தில் இல்லை. அவருக்கு பதிலாக சமீரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஒரு ரூபா நாணயத்தை வைத்துக் கொண்டு ஒரு லட்ச ரூபாய் கடன் அடைச்ச மாதிரி இதென்ன பொருந்தாத ஃபில்லப் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ஆனால் படத்தில் வரும் நாலைந்து ஹீரோயின்களில் இவரும் ஒருவர். அவ்வளவுதான்... மற்றபடி இவரும் கதைப்படி கொலை செய்யப்படும் அப்பாவி பெண்ணாகதான் நடிக்கிறாராம்.

No comments:

Post a Comment