மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday 4 October 2011

பல நாள் பொய்யை நிஜமாக்கிய நடிகை?


கந்தா என்ற திரைப்படம்தான் மித்ராவின் முதல் தமிழ்ப்படம். அதிர்ஷ்டமோ, துரதிருஷ்டமோ, அப்படம் வெளிவருவதற்குள் அவரது இரண்டாவது படமானMithraகாவலன் திரைக்கு வந்தது. இதில் விஜய்க்கு இவரும் ஒரு ஜோடி. படம் முழுக்க விஜய் அசினை காதலித்துக் கொண்டிருப்பார். இறுதியில் மித்ரா விஜய்யை தட்டிக் கொண்டு போய்விடுவார். இது போதாதா? அசினை விட எனக்குதான் படத்தில் முக்கியத்துவம் என்று தைரியமாக பேட்டியெல்லாம் கொடுக்கிற அளவுக்கு முன்னேறினார் மித்ரா.
அவர் சொல்வது உண்மையல்ல என்பதை அடுத்தடுத்த வந்த இடைவெளிகள் சொல்லிக் கொண்டே இருந்தன. அதன்பின் மலையாள படம் கூட சிக்கவில்லை மித்ராவுக்கு. ஏன் என்று கேட்கிற மீடியாவினரிடம் அவர் சொன்ன பதில், எல்லா நடிகைகளும் சொல்லி வரும் சாமர்த்தியமான சமாளிப்பு. நல்ல கதைக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.
சில பொய்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் அது ஒருநாள் உண்மையாகிவிடும் என்றொரு உளவியல் கருத்து உண்டு. அதுதான் நடந்தது மித்ராவின் வாழ்க்கையிலும். தமிழில் வெயிட் நடிகராக கருதப்படும் விக்ரம் தான் நடித்துக் கொண்டிருக்கும் கரிகாலன் படத்தில் இவரையே ஹீரோயினாக்க சம்மதித்துவிட்டார். இருவர் தொடர்பான காட்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கேரள நடிகைகள்தான் கோடம்பாக்கத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதை மெய்ப்பிக்கும் ஆசை எல்லா நடிகைகளுக்கும் இருக்கும் போது மித்ராவுக்கும் இருக்காதா? உங்களின் லட்சியம், ஆசை என்ன என்றால், எனக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா என்கிறார் மித்ரா. கரிகாலன் வெளிவரும்போது தானாக நடக்கும் எல்லாம் என்கிறார் அவர். பல நாள் பொய்யையே ஒரு நாள் உண்மையாக்கியவர் அவர். இப்போது விக்ரமுடன் நடிப்பதால் இந்த நம்பிக்கைக்கு இன்னும் அதிக உரம் போடுகிறார்.
பூத்துக்குலுங்கட்டும் கனவுகள்...
                                                     http://www.tamilcinema.com
                                      

No comments:

Post a Comment