மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday 6 November 2011

நீலகிரி மாவட்டத்தில் மாயமான சினிமா டைரக்டர் மர்ம சாவு!

நீலகிரி மாவட்டத்தில் மாயமான சினிமா டைரக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே உள்ள கொடலட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (38). இவர் ஒசம்முங்காரு என்ற படுகர் மொழி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல் கேசட் விற்பனை நடைபெற்று வருகிறது. வெற்றிவேல் ஊர் ஊராக சென்று பாடல் கேசட்டை விற்பனை செய்து வந்தார். 

கடந்த 4 நாட்களுக்கு முன் பாடல் கேசட் விற்பதற்காக கொலக்கம்பை வந்த அவர் திடீரென மாயமானார். இந்நிலையில் தூதுர் மட்டம் அரசு பள்ளி அருகே உள்ள வனப்பகுதியில் முட்புதருக்குள் டைரக்டர் வெற்றிவேல் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த பொது மக்கள் கொலக்கம்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

தகவல் கிடைத்ததும் குன்னூர் டி.எஸ்.பி. மாடசாமி, கொலக்கம்பை இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். டைரக்டர் மர்ம சாவு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டைரக்டர் வெற்றிவேலுக்கு திருமணம் ஆகி விட்டது. 

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். எனவே மனைவியின் உறவினர்கள் யாராவது வெற்றி வேலை அடித்து கொலை செய்து பிணத்தை முட்புதரில் வீசி சென்றிருக்
கலாமா? அல்லது முன் விரோதத்தில் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment