மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Monday 21 November 2011

யாருடனும் காதல் இல்லை அஞ்சலி ஆத்திரம்


தமிழ்சினிமாவில் பொருத்தமான ஜோடி என்று புகழப்பட்ட பலர், அதே ஜோரில்Anjaliகல்யாணம் கட்டிக் கொண்டு ஓடிப்போன சம்பவங்கள் ஒன்று இரண்டல்ல. ஏராளம்... அந்த வகையில்தான் ஜெய்-அஞ்சலி ஜோடியும் இருக்கும் என்று கணக்கு போட்ட ரசிகர்களுக்கு அஞ்சலி அனுப்பியிருக்கும் அறிக்கை ஒன்று எங்கேயும் எப்போதும் படத்தில் அமைந்திருக்கும் அவரது கேரக்டர் போலவே படார் திடீர்தான்.
ஜெய்யின் பெயரை கூட எழுதாமல் ’அந்த நடிகர்’ என்று மொட்டையாக குறிப்பிடுகிற அளவுக்கு அறிக்கையில் ஒரே சூடு.
என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் நடிகருடன் இணைந்து ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறேன். அதற்கு பிறகு வந்த கிசுகிசுக்களால் இனிமேல் அந்த நடிகருடன் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து சில படங்களை தவிர்த்தேன். எனக்கு யாருடனும் காதல் இல்லை. இதை பகிரங்கமாக அறிவிக்கிறேன். தயவு செய்து மேற்கொண்டு அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அஞ்சலி.
ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் இணைய திட்டமிட்டிருந்த இந்த ஜோடி, இந்த அறிக்கைக்கு பிறகு ஒன்று சேருமா என்பதுதான் நகம் கடிக்க வைக்கிற கேள்வி.

No comments:

Post a Comment