மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday 12 October 2011

இனிமேல் நாங்க ஒன்ணுதான்... எஸ்.ஏ.சி -ன் பக்குவ பேச்சு


நாங்கள் பக்குவமானவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள் மோதிக்கொண்ட போட்டியாளர்கள். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எதிரும் புதிருமாக நின்று அறிக்கை S.A.Chandrasekarபோர் நடத்திக் கொண்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் அணியும், கேயார் அணியும் பதவியேற்பு நாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக் கொண்டதும், தேர்தலுக்கு முன்புவரைதான் நாங்கள் எதிர் எதிர். இனிமேல் ஒன்றுதான் என்று கூறிக் கொண்டதும் கண் கொள்ளா காட்சி. காதெல்லாம் மகிழ்ச்சி.
ஆச்சர்யம் என்னவென்றால் தலைவர் பொருளாளர் தவிர மற்றவர்களை இரு அணிகளில் இருந்தும் தேர்ந்தெடுத்திருந்தார்கள் ஓட்டுபோட்ட வாக்காளர்கள்.
நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் பேசிய எஸ்.ஏ.சி, ’சங்க தேர்தலில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். தேர்தல் முடிவு வருவதற்கு முன்புதான் எதிர் எதிர் அணி. இப்போது தீர்ப்பு வந்துவிட்டது. இனி எல்லாரும் ஒரே அணி. தயாரிப்பாளர் சங்கத்தில் ஏதாவது தவறு நடந்திருந்தால் அதை விசாரிக்க ஒரு குழு அமைத்து அந்த குழு என்ன முடிவு செய்கிறதோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதி கொடுத்தேனோ அவற்றை எல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். யாரிடமும் கருத்து வேற்றுமை கொள்ளாமல் தயாரிப்பாளரின் நலனுக்காக பாடுபடுவேன்’ என்றார்.
                                  www.tamilcinema.com

No comments:

Post a Comment