தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் அனுஷ்கா. இவர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த அனுஷ்காவிடம் அவர் படங்களுக்கு மற்றும் விளம்பரங்களுக்கு வாங்கும் சம்பளம் குறித்து அவர்கள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
என்றாலும் விசாரணையில் வெளியான தகவல்கள் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டில் அனுஷ்கா வீட்டில் நடந்த இரண்டாவது ரெய்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment