மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday, 4 December 2011

மயில்சாமி மகன் படம் பாதியில் நின்றதா?


மயில்சாமியின் மனசு மடேர் என்று உடைவது மாதிரி ஒரு நியூஸ். தனது மகன்Parthom Palaginomஅருமை சந்திரனை பெரிய கனவோடு சினிமாவில் அறிமுகப்படுத்தினார் அவர். ராசு.மதுரவன் இயக்கத்தில் பார்த்தோம் பழகினோம் என்ற படத்தின் மூலம் இவரை அறிமுகப்படுத்தினார் மயில். ஆனால் இந்த படம் பூஜை போட்டு முதல் ஷெட்யூலை தாண்டி நகரவில்லையாம். ஏன்?
அந்த காரணத்தை ஆராய்வானேன்? வெந்த புண்ணில் விரலை பாய்ச்சுவானேன்? படம் டிராப். அவ்வளவுதான் செய்தி. ஆனால் இந்த அருமை சந்திரன் பார்ப்பதற்கு அத்தனை லட்சணம். சென்னை லயோலா கல்லுரியில் விஷுவல் கம்யூனிக்கேஷன் முடித்த இவரை எங்கோ ஓரிடத்தில் பார்த்தாராம் அஜீத். பையன் நல்லாயிருக்கான். நல்ல இயக்குனர்களின் கையில் சிக்கினால் பெரிய எதிர்காலம் இருக்கு என்றாராம்.
அவரது வாய்மொழிக்கு ஏற்ற மாதிரி, வெற்றிமாறன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குனர்கள் வாய்ப்பு தருவதாகவும் சொன்னார்களாம். ஆனால், ராசு.மதுவரன் சொன்ன கதையில் நான் உருகிட்டேன். இதுதான் என் மகனை அறிமுகப்படுத்த சரியான படம் என்றார் மயில்.
இப்போது கேட்டால் சரியான ‘பாடம்’ என்பாரோ என்னவோ?

மொபைல் ஷாப் கடன் மிரட்டி பார்க்கும் அஞ்சலி


தம்பி வெட்டோத்தி சுந்தரமும் ஓரளவு லாபம் பார்த்துவிட்டதால் ஏக சந்தோஷத்தில்Anjaliதிளைத்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. தமிழ்சினிமாவை பொறுத்தவரை நீண்டகாலம் தாக்குப்பிடிப்பார் என்று தற்போது நம்பப்படும் நடிகைகளில் ஒருவராகிவிட்டார் இவர். இந்த நேரத்தில் பழைய பாக்கி ஒன்று அவரை பாடாய் படுத்திக் கொண்டிருந்ததால், அவர்கள் மீது சட்டையை பிடித்து உலுக்காத குறையாக ஆத்திரப்பட்டிருக்கிறார்.
நடிக்க வந்த துவக்கத்தில் ஒரு மொபைல் ஷாப் விளம்பரத்தில் நடித்துக் கொடுத்தார் அஞ்சலி. இதற்காக ஐந்து லட்சம் சம்பளம் பேசிய கம்பெனி, அதில் 46 ஆயிரம் ரூபாயை மட்டும்தான் கொடுத்திருந்ததாம். அதன்பின் தர வேண்டிய மீதி தொகையை தராமல் இத்தனை காலம் இழுத்ததடித்ததோடு அல்லாமல், விளம்பரத்தையும் கடந்த ஐந்து வருடங்களாக பயன்படுததி வருகிறது.
பொறுத்து பொறுத்து பார்த்த அஞ்சலி, அவர்களிடமிருந்து 20 லட்ச ரூபாயை பெற்றுத் தரும்படி கோர்ட் உதவியை நாடியிருக்கிறார். ஒவ்வொரு மொபைல் ஷாப் வாசலிலும் கைநிறைய வணக்கத்துடனும், கண்கள் நிறைய புன்னகையுடனும் நிற்கிறது இவரது கட் அவுட். ஆனால் அதற்குள்தான் புதைந்து கிடக்கிறது இந்த ஐந்து லட்ச ரூபாய் சோகம். ஐயோ பாவம்... 

புருஷன் எப்படியிருக்கணும்? - த்ரிஷாவின் ஆசை


வயசை பற்றி பேசினால் எந்த நடிகைகளுக்கும் பிடிக்காது. ஆனால் எல்லாருக்கும்Trishaபிடித்த த்ரிஷாவுக்கு வயசு எத்தனை இருக்கும்? கணக்கு போடுவதற்காக கைவிரல்களை மடக்கினால் அதுபோகும் இருபத்தைந்தை தாண்டி. இந்த கல்யாண வயசையும் தாண்டிப் போய்விடுவாரோ என்ற அக்கறையால்(?) அடிக்கடி ஒரே கேள்வியை கேட்டு இம்சிக்கிறார்கள் நிருபர்கள்.
எப்பங்க கல்யாணம?
இனிமேலும் இந்த விஷயத்தில் மவுனம் காக்க முடியாது என்று முடிவெடுத்த த்ரிஷா, பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் தனது நிபந்தனையை. பொதுவாகவே நான் நாய் பிரியை. எனக்கு வரப்போகிற கணவர் என் வேவ் லெங்க்த் கொண்டவராக இருக்கணும். வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது என்று அவர் கூறிவிட்டால் என் நிலைமை என்னாவது? அதனால் எவ்வித அவசரமும் கொள்ளாமல் நிதானமாக தேடுகிறேன் அந்த பொறுமைசாலி கணவரை என்கிறார்.
த்ரிஷா சொன்னால் நாயையே கூட கட்டிக் கொள்ள ரெடி என்பார்கள் அவரது தீவிர ரசிகர்கள். இதற்கெல்லாமா அஞ்சுவது த்ரிஷா?