மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Thursday 10 November 2011

வீரப்பன் படத்தில் 'முதல்வர் ஜெயலலிதாவாக' ஜெயசித்ரா!

சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றிய படத்தில் முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் ஜெயசித்ரா.

வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வனயுத்தம் என்ற பெயரில் தமிழ் - கன்னடத்தில் புதி
Jayachitra
ய படம் தயாராகி வருகிறது.

குப்பி, காவலர் குடியிருப்பு படங்களை இயக்கிய ஏ எம் ஆர் ரமேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரில் பணியாற்றிய குழுவினர் ரமேஷுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் வேடத்தில் நடிகர் கிஷோரும், அவரது மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும் நடிக்கின்றனர்.

அதிரடிப்படை தலைவர் டிஜிபி விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் நடிக்கிறார். வீரப்பனின் தந்தையாக யோகி தேவராஜும், அதிரடிப்படை போலீஸ் செந்தாமரைக் கண்ணனாக ரவி காலேவும் நடிக்கிறார்கள்.

வீரப்பன் கொல்லப்பட்ட காலத்தில் முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவரது வேடத்தில் நடிப்பவர் பழைய நடிகை ஜெயசித்ரா. உருவம், நிறம் சில ஒற்றுமை இருவருக்கும் உள்ளதால், ஜெயசித்ராவை இந்த வேடத்துக்கு தேர்வு செய்தார்களாம்.

வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாராக நடிகர் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராய் நடிக்கிறாராம்.

காடுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் மிகப்பெரிய விருந்தாக ரசிகர்களுக்கு இந்தப் படம் அமையும் என்கிறார் இயக்குநர் ரமேஷ்.

No comments:

Post a Comment